Skip to main content

ஏன் அவசரம்..? அதிமுக தலைமை மீது ர.ர.க்கள் விமர்சனம்... கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி!

Published on 06/03/2021 | Edited on 06/03/2021

 

 AIADMK

 

அதிமுகவில் விருப்ப மனு பெற்றவர்களிடம் கடந்த 4ஆம் தேதி ஒரே நாளில் நேர்காணல் நடைபெற்றது. 8,200 பேர் விருப்பமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்கள் அனைவரிடமும் எப்படி ஒரே நாளில் நேர்காணல் நடைபெற்றது என்ற கேள்விக்கு, அது வெறும் கண்துடைப்புதான் என அதிமுகவைச் சேர்ந்தவர்களே சொல்கிறார்கள்.

 

கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள பாஜக (நேற்று இரவு 20 தொகுதிகள் என முடிவு செய்யப்பட்டது), தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள் என வெளியிடப்படாத நிலையிலும், 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட பாமகவுக்கு எந்தெந்த தொகுதிகள் என பட்டியல் கொடுக்காத நிலையிலும், நேற்று (05.03.2021) அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நமக்கு எந்தெந்த தொகுதி என்று சொல்வதற்கு முன்பே அடுத்தக் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிடுமா என்ற கேள்வியும் கூட்டணி கட்சிகளுக்குள் எழுந்துள்ளது. இதனால்தான் தேமுதிக, எந்தெந்த தொகுதிகள் என ஒதுக்கிவிட்டு கூட்டணி உடன்பாடு வைத்துக்கொள்ளலாம் என்கிறது. மேலும் அதிமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 6 பேரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த ஆறு தொகுதிளிலும் விருப்ப மனு அளித்தவர்களிடம் பெயருக்கு நேர்காணல் நடத்தியுள்ளனர். விருப்ப மனு அளித்தவர்களுக்கு கட்சியில் வேறு பொறுப்பு அளிக்கப்படுமா? அந்த தொகுதியில் உள்ள வேறு சமுதாயத்தினருக்கு கட்சி என்ன செய்யப்போகிறது என்ற கேள்வியும் அதிமுக ரரக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

அதிமுகவைச் சேர்ந்த சிலரிடம் நாம் பேசியபோது, முகூர்த்த நாள் என்பதால் முதல் கட்டமாக ஆறு பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு ராசியான எண் ஐந்து, எடப்பாடி பழனிசாமிக்கு ராசியான எண் ஆறு. ஆகையால்தான் ஐந்தாம் தேதி ஆறு பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மற்றப்படி வேறொன்றும் இல்லை. கூட்டணிக் கட்சிகளிடம் எத்தனை தொகுதி என்று பேசும்போதே எந்தெந்த தொகுதி என்று தெரிவிக்கப்பட்டுவிட்டது என்றனர். 

 

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இவர் மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர். சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார். இவர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். 

 

சென்னை ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக அமைப்புச் செயலாளர் டி.ஜெயக்குமார் போட்டியிடுகிறார். இவர் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர். விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியில் சி.வி.சண்முகம் போட்டியிடுகிறார். இவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் எஸ்.பி.சண்முகநாதன் போட்டியிடுகிறார். இவர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை (தனி) சட்டமன்றத் தொகுதியில் எஸ்.தேன்மொழி போட்டியிடுகிறார். இவர் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.