இலங்கை தமிழர் பிரச்னையின் போது திமுக எம்பிக்கள் ஏன் ராஜினாமா செய்யவில்லை? அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேரில் சென்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக குழு முதலமைச்சர் தலைமையில் பிரதமரை சந்திக்க அனுமதி கோரப்பட்டது. அதற்கு முதலில் நீங்கள் வேண்டுமானால் அந்த துறையின் அமைச்சர்களை சந்தியுங்கள் என பிரதமர் தரப்பில் பதில் தரப்பட்டுள்ளது.
காவிரி விவகாரம் தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனையாக இருக்கும் இந்த சூழ்நிலையில் தமிழக குழுவை பிரதமர் சந்திக்க மறுப்பது வேதனையளிக்கிறது. பிரதமர் சந்திக்க மறுத்தால், திமுக, அதிமுக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வோம் என்று மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று இதுகுறித்து சென்னை அயனாவரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,
உள்ளே ஒன்று பேசிவிட்டு வெளியே மற்றொன்று பேசுவது நாகரீகமல்ல. முதலில் துறை அமைச்சர் கட்காரியை சந்தியுங்கள் என்று தான் கூறப்பட்டது. பிரதமர் சந்திக்க மறுப்பதாக நாங்கள் சொல்லாத வார்த்தையை ஸ்டாலின் சொல்லக்கூடாது.
லோக்சபாவில் திமுகவுக்கு ஒரு எம்பி கூட இல்லாத நிலையில் அதிமுகவை ராஜினாமா செய்ய சொல்வது சுலபம். இலங்கை தமிழர் பிரச்னையின் போது திமுக எம்பிக்கள் ஏன் ராஜினாமா செய்யவில்லை. மத்திய அரசில் அங்கம் வகித்து காவடி தூக்கிய திமுக செய்தது என்ன?
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்ற இரு அவையிலும் அதிமுக எம்பிக்கள் அழுத்தம் தருவார்கள். தமிழகத்தின் உரிமையை காக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்னையின் போது திமுக எம்பிக்கள் ஏன் ராஜினாமா செய்யவில்லை? ஜெயக்குமார் கேள்வி
சார்ந்த செய்திகள்
Next Story
“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு
தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.
சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.
ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார்.
Next Story
'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.
First phase, great response! Thank you to all those who have voted today.
— Narendra Modi (@narendramodi) April 19, 2024
Getting EXCELLENT feedback from today’s voting. It’s clear that people across India are voting for NDA in record numbers.