உரிய அனுமதி பெற்ற பின்னரே ட்ரெக்கிங் சென்றோம் என்றும் வனத்துறையிடம் முறையான கட்டணம் செலுத்திய பிறகே குழுவினர் அனுமதிக்கப்பட்டனர் என குரங்கணி பயணம் குறித்து சென்னை டிரெக்கிங் கிளப் விளக்கமளித்துள்ளது.
குரங்கணி காட்டுத் தீ விபத்தில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சென்னை டிரெக்கிங் கிளப் அளித்துள்ள விளக்கத்தில்,
மகளிர் தினத்தையொட்டி, மலையேற்ற பயிற்சிக்கு ஏற்பாடு செய்தோம். உரிய அனுமதி பெற்ற பின்னரே ட்ரெக்கிங் சென்றோம். வனத்துறையிடம் முறையான கட்டணம் செலுத்திய பிறகே குழுவினர் அனுமதிக்கப்பட்டனர்.
பயணத்தை தொடங்கும் போது காட்டுத் தீக்கான அறிகுறி எதுவும் இல்லை. 11ம் தேதி மாலையில் கீழே இறங்கும் போது புற்களுக்கு விவசாயிகள் தீ வைத்ததை குழுவினர் பார்த்தனர். பலமான காற்று வீசியதால் காட்டுத் தீ மளமளவென பரவத் தொடங்கியது.
தீயில் சிக்கி உயிருக்கு போராடிய 3 பேரை திவ்யா முத்துக்குமரன் காப்பாற்றினார். மீண்டும் மற்றவர்களை காப்பாற்ற முற்பட்ட போது தீயில் சிக்கி திவ்யா உயிரிழந்தார். காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.
வனத்துறையினர் அனுமதியோடுதான் சென்றோம்: சென்னை டிரெக்கிங் கிளப் விளக்கம்!
சார்ந்த செய்திகள்
Next Story
6 வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ... அச்சத்தில் கொடைக்கானல்!
கொடைக்கானலில் 6 வது நாளாக பற்றி எரிந்து வரும் காட்டுத்தீ அங்கிருப்போருக்கு அச்சுறுத்தலைத் தந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள வெள்ளைப்பாறை, பெருமாள் மலை உள்ளிட்ட கிட்டத்தட்ட 40 ஏக்கர் வனப்பகுதியில் காட்டுத்தீ எரிந்து வருகிறது. ஏற்கனவே மச்சூர் வனப்பகுதியில் எரிந்த காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் வெள்ளைப்பாறை பகுதியில் காட்டுத்தீ பரவி எரிந்து வருகிறது. அதேபோல் கூக்கால் கிராமத்தில் உள்ள பழம்புத்தூர் வனப்பகுதியிலும் காட்டுத்தீயின் பரவல் அதிகமாக உள்ளது. கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில் காட்டுத்தீ பரவுதல் என்பது எளிதில் நிகழக்கூடிய ஒன்றாகிவிட்டது. தீத்தடுப்பு கோடுகள், எதிர்த்தீ அமைத்தும் வனத்துறையினர் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த காட்டுத்தீயால் வனவிலங்குகள் ஊருக்குள் இடப்பெயர்வு செய்வது அதிகரிக்கும் என கொடைக்கானல் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
Next Story
கொடைக்கானல் அருகே வனப்பகுதிக்குள் வேகமாக பரவும் காட்டுத் தீ!
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள பெருமாள்மலை வனபகுதிக்குள் 500 ஏக்கருக்கும் மேலாக எரிந்து வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில், வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பெருமாள்மலை வனப்பகுதிகளான தோகைவரை, மயிலாடும்பாறை மற்றும் மச்சூர் வனப்பகுதிகளில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழன்கிழமை இரவு முதல் மச்சூர் வனப்பகுதியில் எரியத் தொடங்கிய காட்டுத் தீ, இன்று காலை வரை பல்வேறு பகுதிகளுக்கு பரவி உள்ளது. பெரும் பரப்பளவில் எரியும் காட்டுத் தீயால் வான்முட்டும் அளவுக்கு கடும் புகை மூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது.
தகவலறிந்த வனத்துறையினர் நள்ளிரவு முதல் காட்டுத் தீயை தீத்தடுப்பு எல்லைகளை அமைத்தும், புதர்களை வெட்டி தடுப்புகளை அமைத்தும் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வனப்பகுதிகளில் எரியும் காட்டுத் தீயால், அரிய வகை மரங்கள், செடி, கொடிகள் மற்றும் பூச்சி இனங்கள், ஊர்வன ஆகியவை அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.