Skip to main content

மத்திய அரசை நம்புகிறோம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 18/02/2018 | Edited on 18/02/2018

 

eps



சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர அ.தி.மு.க. செயலாளர் மோகன்-உமாசங்கரி ஆகியோரின் மகள் அக்‌ஷயாவுக்கும், நாமக்கல் பொன்விழா நகரைச் சேர்ந்த சுகுமார்- கமலேஸ்வரி ஆகியோரின் மகன் முத்து பாண்டிக்கும் திருமணம் இன்று காலை ஆத்தூர் அம்மம்பாளையத்தில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த திருமணத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்தார்.


முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
 

உச்சநீதிமன்ற உத்தரவின் படி 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். காவிரி நதிநீர் பங்கீடு தீர்ப்பில் தமிழகத்திற்கு தண்ணீரின் அளவை குறைத்துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது.
 

உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பில் பல்வேறு சாதகமான அம்சங்கள் இடம் பெற்று ள்ளதை வரவேற்கிறேன். தமிழகத்தில் பாசன வசதி பெறும் பரப்பு 24 ஆயிரத்து 708 லட்சம் ஏக்கர் என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்வது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். 
 

ஓராண்டாக எதிர்கட்சிகளின் விமர்சனங்களை தாண்டி சரியான பாதையில் ஆட்சி செய்து வருகிறோம். ஆட்சியை கலைக்க வேண்டும் என்று எண்ணியவர்களின் கனவு கானல் நீரானது.

இவ்வாறு கூறினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

திண்டுக்கல்லில் குறைகிறது 'கரோனா'... -ஆய்வு கூட்டத்தில் முதல்வர் பேச்சு

Published on 06/08/2020 | Edited on 06/08/2020
 Decline in 'Corona'-Chief Minister's speech at the review meeting

 

 

இன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற கரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள்  முன் உரையாற்றுகையில்,   

 

"திண்டுக்கல்லில் கரோனா பாதிப்பு என்பது படிப்படியாக குறைந்து வருகிறது. சிறப்பான பணியை மேற்கொண்ட ஆட்சியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டுகள். பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கரோனாவை கட்டுப்படுத்த முடியும். அரசின் அறிவுரையை கடைபிடித்தால் தான் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பலாம். தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நவம்பர் வரை விலையில்லா அரிசி வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார். 

 

முன்னதாக திண்டுக்கல்லில் 42 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஊரக வளர்ச்சி, தோட்டக்கலை, கால்நடை துறை கட்டிடங்களையும் திறந்துவைத்தார்.