Skip to main content

வழக்கறிஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல் - களேபரத்தை கண்டுகொள்ளாத வைகோ!

Published on 06/07/2018 | Edited on 06/07/2018
v t2

 

பிரணாப்முகர்ஜி வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது தூத்துக்குடி வந்தபோது அவருக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், மதிமுகவினரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து கருப்புகொடி காட்டினர்.  அது சமயம் போலீசார் வைகோ மற்றும் அவரது தொண்டர்கள் மீது வழக்குபதிவு செய்தனர்.  இந்த வழக்கு சில ஆண்டுகளுக்கு பிறகு இன்று தூத்துக்குடி ஜே.எம். 2-வது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.   அதில், ஆஜராகும் பொருட்டு இன்று மதியம் தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு வைகோ வந்தார்.  அப்போது அவருடன் கட்சி தொண்டர்களும் பின் தொடர்ந்து வந்தனர்.   அவர்களும் நீதிமன்றத்திற்குள் நுழைய முற்பட்டனர்.அதை சில வழக்கறிஞர்கள் கண்டித்துள்ளனர்.   அது சமயம் அங்கு நின்றிருந்த ஒரு சில வழக்கறிஞர்கள்,  வைகோ ஸ்டெர்லைட்டில் ஆரம்பத்தில் அவர்களுடன் இணக்கமாக இருந்ததை சுட்டிக்காட்டியும், தற்போது அவர் மீது எழுந்த குற்றச்சாட்டையும் பேசினர்.  இது தொண்டர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.  

 

vt5

 

 வைகோ ஆஜராகிவிட்டு வெளியே வரும்போது,  வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு இருந்த அதே சில வழக்கறிஞர்கள் மீண்டும் கோஷம் எழுப்பி அவரை தகாத வார்த்தைகளால் திட்டினர். இதனைக் கண்டு கோபம் கொண்ட ம.தி.மு.க.வினர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு  குடிபோதையில் இருந்த வழக்கறிஞர்கள் ஜெகதீஷ், வெற்றி  மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மீட்டு தாக்குதல் நடத்தியவர்களிடம் இருந்து வழக்கறிஞர்களை காப்பாற்றினர். இதனால் தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

vt5

 

 ‘எங்கள் தலைவர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது அவரைப்பற்றி குடிபோதையில் இருந்த வழக்கறிஞர்கள் தரக்குறைவாக விமர்சித்து  பேசினர்.   அதை தாங்கமாட்டாமல், பின்னால் வந்த கட்சியினர் தாக்கிவிட்டனர் ’என்கிறார் தூத்துக்குடி மதிமுகவின் முக்கிய நிர்வாகி. 

 அதே சமயத்தில்,  ’வைகோவுடன் வந்தவர்கள் கூட்டமாக அத்துமீறி நீதிமன்றத்திற்குள் புகுந்தார்கள்.  அதை நாங்கள் கண்டித்தோம்.   அதற்காக எங்களை தாக்கினார்கள்’ என்கிறார்கள் வழக்கறிஞர்  தரப்பினர்.  

 

vt

 

இதனிடையே தாக்குதலில் காயம்பட்ட இரண்டு வழக்கறிஞர்களும் அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த களேபரத்தை கண்டுகொள்ளாமல்  நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்த வைகோ, செய்தியாளர்களிடம், ‘ வழக்கு விசாரணையை வரும் 12 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம். ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுவதற்கு  சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.   அதுதான் நிரந்தரமான தீர்வு’ என்று கூறினார்.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விஞ்ஞானிகளுக்கு வழக்கறிஞர்கள் சங்கம் பாராட்டு

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

Lawyers' Association praises  isro scientists in Delhi

 

உலகிற்குத் தமிழால் பெருமை சேர்த்த தமிழ் விஞ்ஞானிகள், வீரமுத்து வேல் (திட்ட இயக்குநர் சந்திரயான் மூன்று விண்கலம்) மற்றும் நிகர் ஷாஜி (திட்ட இயக்குநர் ஆதித்யா எல் 1 விண்கலம்) ஆகியோர் இன்று தில்லி சென்றனர். அவர்களை டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ராம் சங்கர் ராஜா நேரில் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

 

தமிழ் உலகம் மட்டுமல்லாமல் விண்ணுலகமும் போற்றும் இடத்தில் தமிழ் விஞ்ஞானிகள் இருவரும் இடம்பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளதாக ராம் சங்கர் வெகுவாகப் பாராட்டினார். இந்திய அரசின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் மிகப்பெரிய இயக்குநர் பொறுப்பில் இருக்கும் இந்த இருவரும் தமிழர்கள். சந்திரனுக்கு அனுப்பப்பட்ட ‘சந்திரயான் - 3’ என்ற விண்கலமும் சூரியனுக்கு அனுப்பப்பட்ட ‘ஆதித்யா எல் -1’ என்ற விண்கலமும் உருவாக, நடைமுறைப்படுத்த, வெற்றிகரமாக விண்ணில் செலுத்த அமைக்கப்பட்ட விஞ்ஞானிகள் குழுவிற்கு இவர்கள் இருவரும் இயக்குநர்கள் ஆவார்கள். 

 

வீர முத்துவேல் என்ற விஞ்ஞானி தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். விஞ்ஞானி நிகர் ஷாஜி தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இருவரும் உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள் என்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல உலகில் உள்ள அத்தனை தமிழர்களுக்கும் பெருமை. இந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்திய அரசு நிறுவனம். விண்வெளி ஆராய்ச்சியில் உலக அளவில் நாம் இப்போது முன்னிலை பெற்றுள்ளதற்கு இவர்கள் இருவரின் பங்களிப்பு மிகவும் போற்றத்தக்கது. சந்திரயான் மற்றும் ஆதித்யா விண்கலங்கள் இந்தியாவையும் இந்தியப் பொருளாதாரத்தையும், முதலீட்டையும் அதிகரிக்கும் என்றும் வருங்காலத்தில் அதிக பலன்கள் தரும் என்றும் இருவரும் கூறினர்.

 

உலக நாடுகள் இந்தியாவின் இந்த இரண்டு சாதனைகளை உற்று நோக்கிப் பார்த்து வருவதாகவும் நமது விஞ்ஞானிகளின் அறிவுத்திறனைக் கண்டு வியப்பதாகவும் கூறினார்கள். சந்திரயான் திட்ட இயக்குநர் வீரமுத்து வேல் சந்திரனுக்கு சென்றுள்ள விண்கலம் ‘சந்திரயான் - 3’  நிலவின் மண் மற்றும் இதர கனிம வளங்களை ஆராய்ந்து எதிர்காலத்தில் நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான ஆதாரங்களைச் சேகரித்து வழங்கும் என்று கூறினார். அதேபோல் சூரியனுக்கு சென்றுள்ள ‘ஆதித்யா எல் -1’ விண்கலம் சூரியனின் வட்டப் பாதைகளை ஆராய்ந்து, அதன் கதிர்வீச்சுகளை ஆய்வு செய்து உலக வெப்ப மயமாதல் போன்றவற்றை ஆராய்ந்து சொல்லும் என்று கூறினார். 

 

தமிழகத்தின் இரண்டு தலைசிறந்த விஞ்ஞானிகள் நீடுழி வாழவும் இன்னும் பல்வேறு சாதனைகள் செய்யவும் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக மேலும் மேலும் உயர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாகச் சொல்லி நேரில் சென்று டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ராம் சங்கர் பாராட்டினார். அவருடன் டெல்லி தமிழ்ச் சங்க செயலாளர் முகுந்தன் அவர்களும் கலந்து கொண்டு அவர்களை டெல்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பாகவும் வாழ்த்தினார். 

 

 

Next Story

ஒன்றிய அரசைக் கண்டித்து ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டம் (படங்கள்)

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

இந்தி திணிப்பு, அதிகாரக் குவிப்பு, சர்வாதிகாரப் போக்குடைய ஒன்றிய அரசைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வாயிலில் சமத்துவ மற்றும் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் தொடர் முழக்கப் போராட்டம் நடந்தது.