Skip to main content

விஜயகாந்த்திற்கு அஞ்சலி! ஃபோட்டோ ஸ்டோரி

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Vijaykantha passes away photo story
நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் காலாமானார்

 

Vijaykantha passes away photo story
இல்லத்தின் வெளியே தொண்டர் கதறி அழுதார் 

 

Vijaykantha passes away photo story
விஜயகாந்த் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டது

 

Vijaykantha passes away photo story
சாலிகிராமம் இல்லத்தில் விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் அஞ்சலி

 

Vijaykantha passes away photo story
விஜயகாந்த் இல்லத்தில் இருந்து கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டது

 

Vijaykantha passes away photo story
இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் அஞ்சலி செலுத்தினார் 

 

Vijaykantha passes away photo story
ஆறுதல் தெரிவித்த போது உடைந்து அழுத விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் 

 

Vijaykantha passes away photo story
விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நக்கீரன் ஆசிரியர்

 

Vijaykantha passes away photo story
சென்னை தீவுத் திடலில் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடல் 

 

Vijaykantha passes away photo story
விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மேயர் பிரியா 

 

Vijaykantha passes away photo story
மனம் உடைந்து அமர்ந்திருக்கு விஜயகாந்த் குடும்பத்தினர் 

 

Vijaykantha passes away photo story
முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். அஞ்சலி 

 

Vijaykantha passes away photo story
அஞ்சலி செலுத்த வந்த மாற்றுத்திறனாளி

 

Vijaykantha passes away photo story
அஞ்சலி செலுத்த திரண்ட மக்கள்

 

Vijaykantha passes away photo story
கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய நடிகை குஷ்பு 

 

Vijaykantha passes away photo story
அஞ்சலி செலுத்திய நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் 

 

Vijaykantha passes away photo story
அஞ்சலி செலுத்திய த.மா.க. தலைவர் ஜி.கே. வாசன் 

 

Vijaykantha passes away photo story
த.வா.க. தலைவர் வேல்முருகன் அஞ்சலி 

 

Vijaykantha passes away photo story
நடிகர் ரஜினி அஞ்சலி 

 

Vijaykantha passes away photo story
நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி

 

Vijaykantha passes away photo story
பா.ஜ.க. மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி 

 

Vijaykantha passes away photo story
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.