Skip to main content

விஜயகாந்த் உடல்நிலை - பிரேமலதா விளக்கம்

Published on 29/12/2018 | Edited on 29/12/2018
v

 

சிகிச்சை தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளார்.  இந்நிலையில்,  விஜயகாந்த் உடல்நிலை நேற்று மிகவும் மோசமானது என்று  செய்திகள் வந்தது.  தினமும் அமெரிக்காவிலிருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம்  இங்கிருப்பவர்களிடம் பேசும் வழக்கத்தை கொண்ட விஜயகாந்த்,   நேற்று பேசவில்லை.  அத்துடன் அவரது மச்சான் சுதீஷ் நேற்று அவசரமாக தாய்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.  இதையடுத்து விஜயகாந்தின் உடல்நிலை குறித்து வெளியான செய்தி தேமுதிக தொண்டர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.

 

இதன்பின்னர் விஜயகாந்த் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இருப்பதாக படங்கள் வெளியாகியது.  அதையடுத்து தொண்டர்கள் நிம்மதி அடைந்தனர்.

 

நடந்த  என்ன என்பது குறித்து அமெரிக்காவில் உள்ள தமிழ் நிருபர்கள் பிரேமலதாவை தொடர்புகொண்டு கேட்டதாகவும்,  அதற்கு  பிரேமலதா, கேப்டனுக்கு தைராய்டு பிரச்சனை.   இன்னமும் கேப்டனுக்கு சிகிச்சை ஆரம்பிக்கவில்லை.   இன்னும் இரண்டு நாட்கள் கழித்துதான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். தற்போது அமெரிக்காவில் விடுமுறை ஓய்வில்தான் இருக்கிறார் என தெரிவித்ததாக அமெரிக்காவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

 

சென்னையிலும் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனிடம் தந்தையின் உடல்நிலை குறித்து  செய்தியாளர்கள் கேட்டதற்கு,  அப்பாவுக்கு தொண்டையில் தைராய்டு பிரச்சனை உள்ளது.  அதற்காக அவர் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார்.  மற்றபடி ஒன்றுமில்லை என்று தெரிவித்துள்ளார்.


 

v

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசியல் வருகை குறித்த கேள்விக்கு சண்முகப்பாண்டியன் பதில்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
shanmuga pandian press meet

விஜயகாந்தின் இரண்டாவது மகனான சண்முகப் பாண்டியன் சகாப்தம், மதுர வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது படைத் தலைவன் படத்தில் நடித்து வருகிறார். டைரக்டர்ஸ் சினிமாஸ் தயாரிப்பில், உருவாகும் இப்படம் காட்டு யானைகளின் வாழ்வியலை மையப்படுத்தி ஆக்‌ஷன் ஜானரில் உருவாகிறது. யு. அன்பு இயக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். மேலும் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். 

இந்த நிலையில் இன்று சண்முகப் பாண்டியன் பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி பிரேமலதா விஜயகாந்துடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இன்று விஜயகாந்த் மறைந்து 100 நாள் நிறைவடைகிறது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த இல்லாமல் முதல் பிறந்தநாளைக் காண்கிறார். அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவரிடம் விஜய பிரபாகரரை போல் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில் பதிலளித்த அவர்,  “நான் இப்போதைக்கு சினிமாவில் இருக்கிறேன். அண்ணன் அரசியலில் இருக்கிறார். அப்பாவின் ஒரு துறையை அண்ணன் எடுத்துக் கொண்டார். இன்னொரு துறையை நான் எடுத்துக்கொண்டேன்” என்றார். 

இதனிடையே சண்முகப் பாண்டியனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிறிய வீடியோ ஒன்றை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளனர் படைத் தலைவன் படக்குழு. அப்படக்குழுவினரும் சண்முகப் பாண்டியனோடு இணைந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.  

Next Story

விஜயகாந்த் மறைந்து 100ஆவது நாள் - கண்ணீருடன் பிரேமலதா அஞ்சலி

Published on 06/04/2024 | Edited on 06/04/2024

 

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அவரது நினைவிடத்திற்கு இன்றும் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் விஜயகாந்த் மறைந்து இன்றோடு 100 நாள்கள் நிறைவைடைகிறது. இதையொட்டி பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். அவருடன் மகன் சண்முகபாண்டியன் உடனிருந்தார். அவருக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. 

படங்கள் - எஸ்.பி.சுந்தர்