Skip to main content

சின்னாபின்னமான வேதாரண்யம் -  பால், பிஸ்கட்டுகளுக்காக தவிக்கும் குழந்தைகள்!

Published on 16/11/2018 | Edited on 16/11/2018
v

 

தமிழகத்தின் கழிமுகப்பகுதியான  வேதாரண்யம் தாலுக்கா முழுமையாக கஜா புயலால் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

 

நாகை மாவட்டத்தின் கடைகோடி தாலுக்காவான  வேதாரண்யம் கஜா புயலால் சின்னாபின்னமாகியுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி ஒரு வாரத்திற்கு மேல் பொது மக்களை பீதியில் ஆழ்த்தி கொண்டிருந்து. இந்தநிலையில் நேற்று இரவு 2 மணிக்கு மேல் வேதாரண்யம் பகுதியில் கஜா புயல் கரையை கடந்ததால் பலத்த காற்றுடன் மழையும் பலமாக கொட்டித்தீர்த்துள்ளது.

 

v

 

புயலின் கோரதாண்டவம் வேதாரண்யம் தாலுக்காவையே நிலைகுலைய செய்து விட்டது. நாகப்பட்டினம் அடுத்துள்ள வேளாங்கண்ணி முதல் வேதாரண்யம் வரை சாலைக்கு இருபுறமும் உப்பளமும், கடலுமாக இருப்பதால் சாலைகள் முழுமையாக துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முடங்கி விட்டது. அதே போல் திருத்துறைப்பூண்டியில் இருந்து கட்டிமேடு, வாய்மேடு வழியாக வேதாரண்யம் செல்லும் சாலைகளும் முழுமையாக மழை நீராலும், சாலையோரம் உள்ள மரங்கள் சாய்ந்தும், போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டு விட்டது. நேற்று மாலை நிறுத்தப்பட்ட வாகனப் போக்குவரத்து தற்போது வரை இயக்கப்பட முடியாத நிலைக்கு சென்றுள்ளது.

 

ver

 

மேலும் நேற்று மாலையில் இருந்து தற்போது வரை மின்சாரமும், தொலைதொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வெளியூர் செல்லவோ, தொடர்பு கொள்ளவோ முடியாத நிலைமையாகிவிட்டது. அரசு இயந்திரமும், மின்சாரமோ  தொலை தொடர்போ போக்குவரத்தோ இல்லாமல் போனதால் முழுமையாக செயல்பட முடியாத நிலையில் உள்ளனர்.

 

v

 

மின்சார துண்டித்திருப்பதாலும், போக்குவரத்து துண்டித்திருப்பதாலும் அடிப்படைத் தேவைகளுக்கே சிரமப்பட்டுவருகின்றனர். கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.   குழந்தைகளுக்கு தேவையான பால், பிஸ்கட்டுக்குக்கூட வழியில்லாமல் உள்ளனர்.  

 

முன்னெச்சரிக்கையாக தாழ்வான பகுதியில் இருந்த மக்களை முகாம்களுக்கு அழைத்துவரப்பட்டதால், பெரும் உயிர்சேதம் ஏதும் நடக்காமல் தவிர்க்கப்பட்டிருக்கிறது. மழையால் தற்போது விதைக்கப்பட்ட நேரடி விதைப்பு பயிர்களும் தண்ணீரில் முழுகிக்காணப்படுகிறது. 

 

v

 

மீனவர்களின் படகுகள் முழுமையாகவே சேதமாகியுள்ளன.   பல பைபர் படகுகள் புயலில் அடித்து செல்லப்பட்டும், ஒன்றோடு ஒன்று மோதி உடைந்தும் காணப்படுகிறது.

 

அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் சொந்த ஊரான தலைஞாயிறு, ஓரடியாம்பள்ளம், வண்டல், குண்டுரான் வேளி, உள்ளிட்ட விவசாய கிராமங்களும், புஷ்பவனம், வானவன்மகாதேவி, தேத்தாக்குடி, தோப்புத்துறை, கோடியக்கரை உள்ளிட்ட மீனவ கிராமங்களும் முழுமையாக பாதித்துள்ளன. 

 

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நாளையோ, அல்லது மறு நாளோ பார்வையிடுகிறார் அதன் பிறகே நிவாரணப்பணிகளில் ஈடுபடுவோம் என்கிறார்கள் அதிகாரிகள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேங்காய் சிரட்டை மாலையுடன் போராடிய தேமுதிக

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

dmdk who fought wearing a garland of coconuts

 

கஜா புயல் புரட்டிப்போட்ட பிறகு தமிழக விவசாயிகளால் இன்னும் எழ முடியவில்லை. இதனால் ஒட்டுமொத்த விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள் முடங்கி 5 ஆண்டுகள் ஆகிறது.

 

புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பிரதான விவசாயம் தென்னை. அதைச் சார்ந்து தென்னையிலிருந்து உப பொருட்களை தயாரிக்கும் நூற்றுக்கணக்கான சிறு குறு தொழில்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெரும் வணிகமும் நடந்தது. கஜா புயலுக்கு தென்னை மரங்கள் அழிந்ததோடு, அதனைச் சார்ந்த தொழில்களும் நலிவடைந்ததால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கின்றனர்.

 

இதனால் தேங்காய் விலையும் வீழ்ச்சியடைந்து, தென்னை விவசாயிகள் மேலும் மேலும் கடனாளிகளாகி வருகின்றனர். இந்நிலையில், தேங்காய் விலையை உயர்த்த வேண்டும். அரசே தேங்காய் கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்றும் ஆங்காங்கே தேங்காய் உடைப்பு கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகிறது. இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் அரசர் குளத்தில், மாவட்ட தேமுதிக சார்பில் நடந்த தேங்காய் உடைப்பு போராட்டத்தை மாவட்டச் செயலாளர் மன்மதன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் தேங்காய் சிரட்டைகளை மாலையாக கோர்த்து கழுத்தில் போட்டுக் கொண்டு கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிவில் தேங்காய்களை சாலையில் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

Next Story

புதிய மின் பாதைக்காக அழிக்கப்பட உள்ள சாலையோர மரங்கள்... போராடத் தயாராகும் சமூக ஆர்வலர்கள்!

Published on 10/05/2022 | Edited on 10/05/2022

 

Roadside trees to be cleared for new power line ... Community activists ready to fight!

 

மின்பாதைகள் அமைப்பதற்காக சாலை ஓரங்களில் வளர்க்கப்படும் ஆயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்படும் நிலை தொடர்ந்து நீடிக்கிறது. தமிழகத்தில் கஜா புயல் தாக்கத்தால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பல கோடி மரங்கள் அடியோடு சாய்ந்தது. இதில் சாலையோரத்தில் நின்ற பலநூறு வருட மரங்களும் அடக்கம்.

 

இழந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக கிரீன் நீடா, கைஃபா, மரம் அறக்கட்டளை உள்ளபட ஏராளமான தன்னார்வ அமைப்புகள் சாலை ஓரங்களிலும் பொது இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.

 

tree

 

மற்றொரு பக்கம் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களும் சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். தற்போதுகூட சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் காலநிலை மாற்றங்களை சமாளிக்கவும் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் குருங்காடுகள் உருவாக்கும் திட்டங்களை அமைச்சர் மெய்யநாதன் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். மேலும் எந்த ஒரு விழா என்றாலும் மரக்கன்றுகள் நடுவதும் மரக்கன்றுகள் வழங்குவதும் நடந்து வருகிறது. இப்படியான நிலையில்தான் சாலை ஓரங்களில் நடப்பட்டுள்ள மரங்களை சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலைத்துறை பல மரங்களை அகற்றுவது மட்டுமின்றி புதிய மின்பாதைகள் அமைப்பதாக கூறி மரங்களையும் அகற்றி வருகின்றனர்.

 

இதனால் சாலைப் பணியாளர்களின பல வருட உழைப்பு வீணாகிறது. புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி சாலை ஓரங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலம் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிப்பு செய்து வரும் நிலையில் தற்போது மரக்கன்றுகளுக்கு மேலே மின்பாதை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த கன்றுகள் வளரும்போது மின்கம்பிகளில் உரசும் என்பதால் அந்த மரக்குழந்தைகளை வெட்டி அகற்றவும் உள்ளனர்.

 

சில மின்கம்பங்களுக்காக பல நூறு மரக்குழந்தைகளை அழிப்பதை விட 10 தூரம் சில மின் கம்பங்களை மாற்றி நட்டால் போதும் மரங்கள் பாதுகாப்பாக வளரும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன் வாகன ஓட்டிகளுக்கு நிழலாகவும் இருக்கும் என்று கூறும் சமூக ஆர்வலர்கள் மின்கம்பங்களை மாற்றி நடாமல் மரக்கன்றுகளை அகற்ற முயன்றால் போராடவும் தயாராக உள்ளோம் என்கிறார்கள்.