Skip to main content

“வீட்டுக்கு ஒரு பசுமாடு கொடுத்தும் பர்கூரில் தோற்றார் ஜெயலலிதா!” -சாத்தூரில் ஆளும்கட்சியினரை விளாசிய வைகோ! 

Published on 05/12/2018 | Edited on 05/12/2018
vaiko



 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,  சாத்தூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.  


“திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான அணி 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறும். இந்த 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு பிப்ரவரியில் தேர்தல் வந்தாலும் வெற்றி பெறும். நாடாளுமன்ற தேர்தலோடு நடந்தாலும் வெற்றி பெறும். இந்த 20 தொகுதிகளுடைய களப்பணிகளிலே மதிமுக முழுமையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பணிக்குழு அமைத்துவிட்டால், திமுகவுக்கு வேலை சுலபமாகிவிடும். இந்த 20 தொகுதிகளில் யார் வேட்பாளர்? தோழமைக் கட்சிகள் போட்டியிடுமா? இதையெல்லாம் திமுக தலைமை தீர்மானிக்கும். அதுகுறித்து பேசுவதற்கு இங்கு நான் வரவில்லை. இந்த 20 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுகவே போட்டியிடுமா? அல்லது தோழமைக் கட்சிகளுக்கு ஒன்றிரண்டு தொகுதிகளை விட்டுக்கொடுக்குமா? என்பதையெல்லாம் திமுக தலைமை முடிவு செய்யும். ஆனால், 20 தொகுதிகளிலும் எங்கும் ஆயத்தப்பணிகளில் மதிமுக தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும்.  பெரும் பண வெள்ளத்தை எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. ஓட்டுக்கு ஆயிரமோ, ரெண்டாயிரமோ, ஐயாயிரமோ தரலாம். ஆனால், அவர்கள் எவ்வளவு கொடுத்தாலும் சரி.  பர்கூர் தொகுதியில் வீட்டுக்கு ஒரு பசுமாடு கொடுத்தார் ஜெயலலிதா. ஆனால், ஜெயலலிதா அங்கு தோற்றுப்போனார்.



எங்கள் இயக்க வரலாற்றிலேயே, இப்படி ஒரு தேர்தல் களத்தில், நாங்கள் இதுபோன்று ஆயத்தமானது கிடையாது. பணிகளைத் திட்டமிட்டு செய்துகொண்டிருக்கிறோம். 66000 பூத்துக்களில் உள்ள பணிக்குழுவினருக்கு பேட்ஜ் கொடுக்கப் போகிறோம். தேர்தல் நடக்கும்போது, அந்த பேட்ஜோடுதான் வந்து நிற்பார்கள். மிகத்திட்டமிட்ட பணி. முறையாகச் செய்திருக்கிறோம்.” என்று பேசிவிட்டு, கேள்விகளுடன் காத்திருந்த செய்தியாளர்களிடம்,   “தமிழ்நாட்டு அரசியல், கஜா புயல், கவர்னர் பிரச்சனை, சட்டமன்றம் எப்போது கூடப் போகிறது? இப்படி பல பிரச்சனைகள் இருக்கின்றன. அதையெல்லாம் நான் சொன்னால், டிவிக்களில் அதைப் போடுவதற்கு இடம் கிடைக்காது. நிறைய கேள்விகளை நீங்க வச்சிருக்கீங்கன்னு எனக்குத் தெரியும். டிவியில் எனக்கு கொடுக்கிறது 3 நிமிஷம்தான். இதை மட்டும் போடுங்க. இல்லையென்றால் உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்வதைத்தானே டிவியில் போடுவீங்க? இதை எங்கே போடுவீங்க?” என்றவர், தன் மீதான விமர்சனம் குறித்த ஒரு கேள்விக்கு “விமர்சனமே வாழ்க்கை!” என்று சிரித்தார். 


வைகோவுக்கு யார் மீது என்ன கோபமோ?  மனதில் இருந்ததை கட்சி நிர்வாகிகளிடம் சாத்தூரில் கொட்டித் தீர்த்துவிட்டார். இதைச் சொல்லியிருக்க வேண்டாமே! பெரிய நியூஸாயிருமே! நான் எவ்வளவு ஆபத்தானவன்ங்கிறத அவங்க தெரிஞ்சிக்கனும். தூரத்தில் இருந்தால் இந்த நெருப்பு குளிரைப் போக்கும். உரசிப் பார்த்தால் இந்த நெருப்பு தீ பிடிக்கும். இதுதான் வைகோ. ஏன் இதைப் பேசுறேன்னா.. பேசணும். ராத்திரியெல்லாம் நான் தூங்கல. என்கிட்ட என்ன இருக்கு. நான் அன்னக்காவடி. என் தாத்தா பெரிய வீட்டைக் கட்டி வச்சிட்டு போயிட்டாரு. அவ்வளவுதான். கொஞ்ச காலமா வீட்டை வெள்ளையடிக்கக்கூட என்கிட்ட ரூபாய் இல்ல. கை சுத்தமா இருக்கிறதுனாலதான்.. என்கூட இவ்வளவு பேர் இருக்காங்க. மனசு ரொம்ப நொந்துபோயி.. ராத்திரியெல்லாம் தூங்காம.. அதனாலதான் இதையெல்லாம் பேசுறேன்.


2006 தேர்தலில் என்கிட்ட ரூபாய் கிடையாது. தூத்துக்குடி மாவட்டத்துல இருந்த திருமாவளவனுக்கு போன் பண்ணி, கலிங்கப்பட்டிக்கு வந்துட்டு போங்கன்னு சொன்னேன். கலிங்கப்பட்டிக்கு வந்தாரு. எனக்கே செலவுக்கு பணம் கிடையாது. மாவட்ட செயலாளர் ஆர்.எம்.எஸ். நொந்துபோய் கிடக்காரு. திருமாவளவனை எங்க அப்பா தங்கின ரூமுக்கு கூட்டிட்டு போயி 30 லட்ச ரூபாயை தூக்கிக் கொடுத்தேன். எலெக்ஷன் செலவுக்கு வச்சிக்கங்கன்னு. எலெக்ஷனுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி போன் பண்ணி.. அண்ணே.. பூத் செலவுக்கே இல்லண்ணே.. எல்லாம் காலி ஆயிருச்சு.. ஏதாவது உதவி பண்ணுனாத்தான் முடியும்னு சொன்னாரு.  பத்து பேர்கிட்ட ரெண்டு ரெண்டு லட்சமா கடன் வாங்கி.. 20 லட்ச ரூபாயை 12 மணி நேரத்துல அனுப்பி வச்சேன். இதையெல்லாம் என்னைக்கும் நான் சொன்னது கிடையாது. மனசு நொந்து எரிஞ்சுக்கிட்டிருக்கிறதுனால சொல்லுறேன். வைகோ இந்த தொகுதியில் போட்டி போட்ருவாரோ? நல்லா யூகம் பண்ணுவாங்க பத்திரிக்கைக்காரங்க. ஒருவேளை சாத்தூர்லயே இடைத்தேர்தல்ல நின்னுருவாரோ?


இத பாருய்யா.. 20 தொகுதிலயும் இதே மாதிரிதான் கூட்டம் போடப்போறேன். திமுக தலைமைதான் முடிவு பண்ணும்.  திமுக வேட்பாளரை நிறுத்தினா இதே வேலையை அவங்களுக்கு செஞ்சுட்டு போறோம். அதனால, அந்தக் கணக்கெல்லாம் போட வேண்டாம். நான் தண்ணில தடம் பார்த்திருவேன். காற்றுல தடம் பார்த்திருவேன். என் தடத்தை எவரும் கண்டுபிடிக்க முடியாது.” என்று அனல் கக்கினார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.