டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் கலந்துக்கொணடனர்.
இதில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், பொது முடக்கம் தொடர்பாகஆலோசிக்கப்பட்டதாக தகவல் கூறுகின்றன. அதேபோல் இந்திய- சீன லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.