Advertisment

சென்டிமென்டாக தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் கொடியேற்றி துவங்கிய உதயநிதி!

ddd

Advertisment

திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார்.

முன்னதாக சிந்தாமணி அண்ணாசிலை அருகே கட்சி கொடியை ஏற்றி கல்வெட்டை திறந்தார். இதனைத் தொடர்ந்து திருச்சி அறிவாலயத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி மற்றும் மணப்பாறையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இன்று மதியம் 2 மணிக்கு நாகை மாவட்டம் திருக்குவளையில் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார்.

திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட திமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisment

கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலினுக்கு பூரண கும்ப மரியாதை மற்றும் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மலர்களை தூவி வரவேற்றனர். கூட்டம் அதிகளவு இருந்ததால் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நிகழ்ச்சி நடந்தது.

trichy election campaign Udhayanidhi Stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe