Skip to main content

முதல் ஆளாக பிரச்சாரத்திற்கு வரும் உதயநிதி ஸ்டாலின்! உற்சாகத்தில் உடன்பிறப்புகள்!

Published on 20/11/2020 | Edited on 20/11/2020
ddd

 

வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார பயணத்தை, முதல் ஆளாக தனது தாத்தா பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து துவங்க இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

 

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் நடத்த திட்டமிட்டிருக்கிறது தேர்தல் ஆணையம். கரோனா இருந்தாலும் திட்டமிட்டபடி தேர்தல் நடந்தே தீரும் என தலைமை தேர்தல் ஆனையர் திட்டவட்டமாக கூறிவிட்டார். வாக்காளர் வரைவு பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

 

இந்த சூழலில் வரப்போகும் தேர்தலை எதிர்கொள்ள ஆளும்கட்சி, எதிர்கட்சி, கூட்டணிக் கட்சிகள் என போட்டிப்போட்டுக்கொண்டு ஆயத்தமாகி வருகின்றனர். பாஜக எப்படியாவது தமிழக சட்டமன்றத்தில் நுழைந்துவிட வேண்டும் என வேல்யாத்திரை மூலம் தங்களுக்கான கூட்டத்தை சேர்த்துக்கொண்டிருக்கிறது. ஆளும் அதிமுகவோ ஜெயலலிதா பாணியில் கரன்சியையும், அதிகாரத்தையும் ஒருபுறம் பலமாக நம்பிக்கொண்டு, மறுபுறம் அரசு நிகழ்ச்சிகள் மூலம் தங்களது சாதனைகளை கூறிவருகிறது.

 

ddd

 

எதிர்கட்சியான திமுகவோ இந்த தேர்தல் வாழ்வா சாவா தேர்தல் என பல வியூகங்களை வகுத்து களத்திற்கு சென்றுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் இணையதளம் மூலம் தமிழகத்தை மீட்போம் என முதற்கட்ட பிரச்சாரத்தை முடித்திருக்கிறார். திமுகவின் தேர்தல் பணிக்குழுவினரும் மாவட்டம் மாவட்டமாக சென்றுள்ளனர். 

 

இந்தநிலையில் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதல் நபராக நூறுநாள் தேர்தல் பிரச்சாரப்பயணத்தை தனது தாத்தாவின் பிறந்த ஊரான திருக்குவளையில் துவங்கி திருவாரூர், நாகை, தஞ்சை ஆகிய மூன்று மாவட்டங்ககளில் முதற்கட்டமாக முடிக்கிறார்.

 

ddd

 

உதயநிதியின் வருகைக்காக நாகை மாவட்டம் திருக்குவளையில் திமுகவினர் உற்சாகமாக வேலைகளை செய்து வருகின்றனர். அதேபோல திருவாரூரிலும் மயிலாடுதுறையிலும் பேனர், போஸ்டர் என வேகமெடுத்துள்ளனர்.

 

இதுகுறித்து நாகை மாவட்ட திமுகவினர் கூறுகையில், "உதயநிதியின் வருகை சோம்பிக்கிடக்கும் திமுகவினரை உற்சாகப்படுத்தும், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் அவரது வருகைக்கு பிறகு கட்சியில் உள்ள இளைஞர்களின் எழுச்சி அதிகமாகியது. அதோடு அவரது பிரச்சாரமும் சற்று கை கொடுத்தது. அதை எல்லாம் தாண்டி உதயநிதி கலைஞரைப்போல கைராசிக்காரர். அதனாலத்தான் அவரே முதலில் மக்களை சந்திக்கும் தேர்தல் பிரச்சாரத்தை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. திருக்குவளை கலைஞர் பிறந்த ஊர் என்பதை தாண்டி செண்டிமெண்டான ஊர் என்பதால் அங்கிருந்து துவங்கப்படுகிறது. கரோனா ஊரடங்கை காரணம் காட்டி அதிமுக தடுக்க நினைத்தால் தடையை மீறி பிரச்சாரம் செய்வோம், அதன்பிறகு அவங்க எங்கேயும் ஒரு நிகழ்ச்சிக்கூட நடத்த முடியாதபடி செய்திடுவோம்" என்கிறார்கள்.

 

கடந்த ஆண்டு ஜூலை 13ம் தேதி திமுக இளைஞரணி செயலாளராக பொருப்பேற்றதும், திருக்குவளைக்கு வந்த உதயநிதிக்கு வழி நெடுகிலும் அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.