Skip to main content

தினகரன் தொகுதிக்குள் வர கடும் எதிர்ப்பு! - வாகனம் மீது கல்வீச்சு!- ஆர்.கே.நகரில் பரபரப்பு!

Published on 18/07/2018 | Edited on 18/07/2018
ttv s


சென்னை ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்த வாகனங்கள் மீது கல்வீசி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கே.நகர் எம்.எம்.ஏ., டிடிவி தினகரன் தொகுதிக்குள் வர கடும் எதிர்ப்பு தெரிவித்து சிலர் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை டிடிவி ஆதரவாளர்களும் பதில் தாக்குதல் நடத்த முற்பட்டனர். இதனால் இரு தரப்புக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து, கல்வீசி தாக்கியவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். இதில் டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கும், கல்வீச்சு சம்பவத்தை தடுக்க முயன்ற போலீசார் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் ஆர்.கே.நகர் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பரபரப்பாக காணப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா வழக்கு; விளக்கமளிக்கத் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Published on 22/08/2023 | Edited on 22/08/2023

 

RK Nagar embezzlement case The High Court ordered the Tamil Nadu government to explain

 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஆர்.கே. நகர் தொகுதிக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலின்போது, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அப்போதைய அதிமுக அமைச்சர்கள் மற்றும் அதிமுக தரப்பினர் பணப்பட்டுவாடா செய்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

 

இடைத்தேர்தலின் போது 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பணப்பட்டுவாடாவைத் தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என திமுக வேட்பாளர் மருது கணேஷும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என வழக்கறிஞர் வைரக்கண்ணன் என்பவரும் கூடுதல் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து சிபிஐயை பிரதிவாதியாக சேர்த்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அப்போதைய அதிமுக அரசு இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இதற்கு தடை உத்தரவும் பெற்றிருந்தது.

 

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மருது கணேஷ் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பணப்பட்டுவாடா புகாரை மாநில போலீசாரே விசாரிக்குமா, சிபிஐ விசாரணை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கில் தடையை நீக்கி தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா எனக் கேள்விகளை முன் வைத்தார்.

 

இதனைக் கேட்டறிந்த நீதிபதிகள், ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான புகாரை மாநில போலீசாரே விசாரிப்பார்களா என்பது குறித்து தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் மாதம் 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

 

Next Story

மக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கிய திமுகவினர்! (படங்கள்)

Published on 01/06/2021 | Edited on 01/06/2021

 

 

இந்தியா முழுவதும் கரோனாவின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பல மாநிலங்களிலும் முழு ஊரடங்கு உட்பட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தமிழகத்திலும் மே மாதம் 10ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது. அதன்பின்னர் கரோனாவின் தாக்கம் அதிகரித்த காரணத்தால் மே 24ஆம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டு தற்போது வரை அமலில் உள்ளது. இந்த சமயங்களில் பல ஆதரவற்ற மக்களும், சாலையோர மக்களும் பசியால் வாடி வருகின்றனர். 

 

அதனை அறிந்த தன்னார்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பசியால் வாடும் ஏழை மக்களைத் தேடித் தேடி உணவுகளையும் தங்களால் முடிந்த அத்தியாவசிய பொருள்களையும் கொடுத்து உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை ஆர்.கே.நகர் 42வது வட்டத்தில் திமுக எம்.எல்.ஏ ஜே.ஜே.எபினேசர் தலைமையில், S.சுந்தர்ராஜன், S.ஜெபதாஸ்பாண்டியன் முன்னிலையில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் லஷ்மி வேலு, இளைய அருணா ஏற்பாட்டில் 300 பேருக்கு உணவு வழங்கினார். இதில் பகுதி நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.