Skip to main content

ரகசிய வீடியோ எடுத்து சிறைக்குப் போன திருச்சி ஜானகி என்னும் ஜானகிராமன்!

Published on 01/06/2020 | Edited on 01/06/2020

 

trichy


திருச்சியில் ஜானகி என்கிற ஜானகிராமன் தான் நடத்தும் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த பெண்ணை ஊரடங்கைப் பயன்படுத்தி தன் வீட்டில் தங்க வைத்து, குளிக்கும்போது வீடியோ எடுத்த விவகாரம் போலிஸ் கமிஷனர் வரை புகார் சென்றதையடுத்து ஜானகிராமன் தற்போது கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். 
 

 

ஜானகிராமன் விவகாரம் குறித்து திருச்சி மாநகர போலிஸ் ரகசியம் காத்து வந்தது குறித்து போலிஸ் அதிகாரியிடம் விசாரித்தபோது, பாதிக்கபட்டவர் மைனர் பெண் என்பதால் இது குறித்து தகவல் வெளியிடவில்லை என்றனர்.

ஜானகிராமன் பெண்கள் விடுதி நடத்திய காஜாநகர் பகுதியில் உள்ள மக்கள் நக்கீரனை தொடர்பு கொண்டு, 'எங்க ஏரியாவில் திடீரென நிறைய போலிசார் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த விடுதியைக் கடந்த 3 நாட்களாக சல்லடையாகச் சோதனை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். போலிசார் எப்போதும் பாதுகாப்பில் இருக்கிறார்கள். இது எங்களுக்குப் பதட்டமாகவே இருக்கிறது' என்று தொடர்ந்து தகவல் வர, நாம் அந்தப் பகுதியில் விசாரிக்க ஆரம்பித்தோம்.

கடந்த 2018ஆம் ஆண்டு திருச்சியைச் சேர்ந்த சஞ்சீவி (45) என்பவர் சென்னை ஆதம்பாக்கம் தில்லை பெண்கள் விடுதி நடத்தியபோது விடுதி அறையில் ரகசிய கேமிரா வைத்து பெண்களைப் படம் பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும் பெண்கள் விடுதிகள் நடத்துவதற்கு கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டது.
 


இந்த நிலையில் தான் ஆச்சாரமாக இருந்து பழக்கப்பட்ட குடும்பம் என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளும் காஜா நகரில் ஜானகிராமன் நடத்தி வந்த பெண்கள் விடுதிக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த விடுதியைக் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக நடத்தி வந்திருக்கிறார். அந்தப் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் உள்ள விடுதிகளுக்கு வாங்கும் கட்டணத்தை விட குறைவான கட்டணத்தை வசூல் செய்வதால் கஷ்டப்படும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் இயல்பாக இங்கு வந்து சேருகிறார்கள். கல்லூரி விடுதியின் கட்டுபாடுகளை மீறி செயல்பட்டு நீக்கப்பட்ட பெண்கள் இந்த விடுதியில் சேர்ந்திருக்கிறார்கள். 
 

trichy


விடுதி மாணவிகளில் சிலர் இரவு நேரங்களில் விடுதியில் முன்பு ரோட்டில் நின்று கொஞ்சி குலாவி பேசிக்கொண்டு இருப்பதைப் பார்த்த அந்தத் தெரு பொதுமக்கள் சிலர் கோபமாகி ஜானகிராமனை அழைத்து கண்டித்திருக்கிறார்கள். ஜானகிராமனின் தாயார்தான் விடுதியைக் கவனித்து வருகிறார். சமையலுக்கு வயதான ஒருவரை நியமித்து இருக்கிறார்கள். ஜனகிராமனுக்கு விடுதியின் முன் அறையில் தங்கி இருக்கிறார். அந்த விடுதியில் அதிகப்பட்சமாக 60 முதல் 80 பெண்கள் வரை தங்கியிருக்கிறார்கள். 

பெண்கள் விடுதிக்கு முறையான அனுமதி இல்லாமல் எந்த போர்டும் வைக்காமல் தான் விடுதி நடத்தி இருக்கிறார். 

ஜானகிராமனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவகாரத்து வரை சென்று தற்போது விடுதியில் தங்கியிருந்த பெண்ணுடன் இருக்கிறாராம். விடுதி விடுமுறை விட்டால் உடனே விடுதியில் உள்ள பாத்ரூம் லைட்டுகளை தான் மாற்றிக்கொண்டே இருப்பாராம். 

தற்போது ஊரடங்கு அறிவிப்பு வெளியானவுடன் விடுதியில் உள்ள அனைத்து பெண்களை ஊருக்கு அனுப்பி விட கேரளவில் இருந்து டான்ஸ் சொல்லி கொடுக்க வந்திருந்த ஒரு பெண், இந்த விடுதியில் தனியே தங்க வேண்டாம் என்று கே.கே. நகரில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார். 
 

http://onelink.to/nknapp

 

கே.கே. நகர் வீட்டில் தங்க வைத்த அந்த கேரள பெண்ணிற்குத் தெரியாமல் குளிக்கின்ற போது மாடியில் இருந்து வீடியோ எடுத்திருக்கிறார், இதைக் கண்டுபிடித்த அந்தப் பெண், கேரளாவில் உள்ள தன் பெற்றோருக்குத் தகவல் சொல்லவும் உடனடியாக திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் அழுது கொண்டே புகார் செய்திருக்கிறார். 

உடனே காவல்துறை ஆணையர் நேரடியாக ஜானகிராமன் வீடு, மற்றும் விடுதிகளை ஆய்வு செய்து சீல் வைக்க உத்தரவிட்டார்.  ஒரு பெரிய போலிஸ் படையே சென்று கடந்த 4 நாட்களாக போலிஸ் காவலில் வைக்கப்பட்ட அந்த விடுதி முழுவதும் சல்லடையாகத் தேடப்பட்டு கடைசியில் ஜானகிராமன் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

ரகசிய வீடியோ எடுத்த வழக்கில் கைதான ஜானகிராமன் திருச்சியில் உள்ள சில முக்கியமான சங்கங்களில் பொறுப்புகளில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. 

பெண்கள் விடுதியை எப்படி ஆண் நடத்துவதற்கு இங்கு உள்ள அரசு அதிகாரிகள் அனுமதி கொடுத்தனர். திருச்சியில் உள்ள பெரும்பாலான தனியார் பெண்கள் விடுதிகளை ஆண்கள் தான் நடத்துகிறார்கள். இதைச் சரியாகக் கவனிக்க வேண்டிய அரசு அதிகாரிகளைக் கவனித்து விட்டால் அவர்கள் இந்த விடுதிகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள் என்பது தான் கவலைக்குரிய செய்தி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துரை வைகோவிற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister Anbil Mahesh gathered support for Durai Vaiko

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், வருசை ராவுத்தர், சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம், பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் ஓ.எப்.டி. சிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை  சகாயராஜ் அடிகளார், திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன  திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயம் அருளானந்தம் அடிகளார் ஆகியோரை சந்தித்து இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார்.

சென்ற இடமெல்லாம் துரை. வைகோவுக்கு அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களின் பிரச்சனைகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுக்க துரை வைகோவுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள்  ராஜ் முகம்மது,  மோகன், மணிவேல், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கங்காதரன், கே.எஸ்.எம். கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மண்டல குழு தலைவர் ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்  பொற்கொடி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து இன்று காலையில் திருச்சி கேர் கல்லூரியில் தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு துரை. வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திமுக மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளைச் சந்திக்கும் துரை வைகோ மாலையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.