Skip to main content

நாய், ஆடுக்கு திருமணம் செய்த இந்து அமைப்பினர் - விவாகரத்து கேட்கும் த.பெ.தி.க.!

Published on 15/02/2018 | Edited on 15/02/2018

கோவையில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க இந்து அமைப்பினர் தாலி கட்டி திருமணம் செய்து வைத்த ஆடு மற்றும் நாய்க்கு விவகாரத்து வழங்கக்கோரி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நூதன போராட்டம் நடத்தியுள்ளனர்.

 


கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆடு மற்றும் நாயுடன் திரண்டனர். தாலி கட்டப்பட்டும், நெற்றியில் குங்கும பொட்டும் வைத்திருந்த அலமேலு என்ற ஆடு மற்றும் அஞ்சலி என்ற நாய்க்கு, இந்து அமைப்பினர் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திருமணம் செய்து வைத்தனர். 

 

TPTK

 

இந்நிலையில், இந்த இரண்டு விலங்குகளுக்கும் விவகாரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவ்வமைப்பினர் தெரிவித்தனர். ஒருவனுக்கு ஒருத்தி என தாலி கட்டியவுடன் வாழ்வதுதான் கலாச்சாரம் எனக்கூறும் இந்து அமைப்பினர், தாலி கட்டி திருமணம் செய்துவைத்த ஆட்டையும், நாயையும் நடுத்தெருவில் விட்டுச் சென்றதாகவும் த.பெ.தி.க. அமைப்பின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் குற்றம்சாட்டினார். 

 

 

மேலும், இவற்றை கணவனுடன் சேர்த்துவைக்கக் கோரி மாநகர காவல் ஆணையாளரிடம் மனு அளித்து ஓராண்டு ஆகியும் நடவடிக்கை எடுக்காததால், நீதிமன்றத்தை நாடி இருப்பதாகவும் கூறிய அவர், தங்களது அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் விவகாரத்து மனுத்தாக்கல் செய்வார்கள் என தெரிவித்தார். இந்த நூதன போராட்டம் காரணமாக நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

சார்ந்த செய்திகள்

Next Story

திண்டுக்கல்லில் காதலர் சங்கமம்; காதல் திருமணம் செய்தவர்கள் கௌரவிப்பு!

Published on 14/02/2023 | Edited on 14/02/2023

 

Valentine's Confluence in Dindigul; Love married people honor!

 

திண்டுக்கல்லில் காதலர் சங்கமத்தில் காதல் திருமணம் செய்தவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

 

திண்டுக்கல்லில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு காதலர் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வு திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டக்குழு அலுவலகமான தோழர் ஏ.பாலசுப்ரமணியம் நினைவரங்கத்தில் நடைபெற்றது. 

 

இந்த நிகழ்ச்சியில் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் கௌரவிக்கப்பட்டனர். மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுமதி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாவட்டத் துணைத்தலைவர் வனஜா வரவேற்றார். மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலச் செயலாளர் ராணி ஆகியோர் கலந்து கொண்டு காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளை பாராட்டி கௌரவித்து சிறப்புரையாற்றினர்.

 

சிபிஎம் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் முத்துச்சாமி ஆகியோர் காதலர்களுக்கு ரோஜா மலர் கொடுத்து காதலர்களை வாழ்த்தி பேசினர். மாதர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் பாப்பாத்தி, பாண்டியம்மாள், சுமதி, தங்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காதல் தம்பதிகள் பாரதி பாலாஜி, பொன்மதி கிருஷ்ணமூர்த்தி,  தங்கமணி ராஜாமணி, பாண்டிச்செல்வி பிரேம்குமார், கீர்த்தனா விஷ்ணு, மோகனா அழகுராஜா, ஜெயந்தி பாலமுருகன், தரணி சபரீஸ்வரன், வீரச்சின்னு தேவா, நித்யா வினோத்,  ராஜேஷ்வரி, கேக் வெட்டி ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். ஒவ்வொரு காதலரும் தாங்கள் காதலித்த நாட்களில் கிடைத்த இனிமையான தருணங்களை  மலரும் நினைவுகளாக உருக்கமுடன் பேசிக் கொண்டனர்.

 

 

Next Story

காதலர் தினத்தில் 15 நக்சலைட்டுகளுக்கு திருமணம் செய்து வைத்த போலீசார்

Published on 15/02/2021 | Edited on 15/02/2021

 

naxals.jpg

 

காதலர் தினத்தை முன்னிட்டு சரணடைந்த 15 நக்சலைட்டுகளுக்குக் காவல்துறையினர் திருமணம் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் என்பது மிக அதிகம். அடிக்கடி வெடிகுண்டு உள்ளிட்ட தீவிரவாத தாக்குதல்கள் அந்த மாநிலத்தில் சகஜமாக நடைபெறும். குறிப்பாக சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் மிக அதிகம். இந்நிலையில் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட அம்மாவட்டத்தைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட நக்சலைட்கள் ஆயுதங்களை ஒப்படைந்து காவல்துறையிடம் சரணடைந்தனர். இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு 15 நக்சலைட்டுகளுக்கு அம்மாநில போலீசார் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

 

இந்தச் சம்பவம் மற்ற நக்சலைட்டுகள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களும் திருந்தி, குடும்ப வாழ்வுக்கு வருவார்கள் என்று காவல்துறை தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.