டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக 40- க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

குரூப் 2ஏ, குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் ஏற்கனவே கைதான ஜெயக்குமார் மற்றும் ஓம்காந்தனை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது இருவரையும் 7 காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கோரி சிபிசிஐடி தரப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

tnpsc exams jayakumar saidapet court

Advertisment

இதனிடையே ஜெயக்குமார், ஓம்காந்தன் இருவரும் மதுரைக்கு தங்களை அழைத்துச்சென்று மிரட்டி ஒப்புதல் வாக்குமூலம் பெற்றதாக சிபிசிஐடி போலீஸார் மீது நீதிபதியிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து துன்புறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என சிபிசிஐடிக்கு அறிவுறுத்திய நீதிமன்றம், ஆறு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.