Advertisment

ஒலி மாசுவை கட்டுப்படுத்த அதிகாரிகள் நியமனம் - தமிழக அரசு அறிவிப்பு!

TN govt announcement Appointment of officials to control noise pollution 

குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரத்தில் ஹாரன் பயன்படுத்தக் கூடாது எனத் தமிழக அரசு அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது.

Advertisment

குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்கள், அமைதி மண்டலம் என்று வரையறை செய்யப்பட்ட இடங்களில் ஹாரன் பயன்படுத்தக் கூடாது எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதே போன்று ஒலியை வெளியிடும் கட்டுமான கருவிகளையும் இரவு நேரங்களில் அமைதி மண்டலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இயக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு ஒலி வெளியிடும் பட்டாசுகளை இரவு நேரங்களில் அமைதி மண்டலங்களில் வெடிக்கக் கூடாது.

Advertisment

மேலும், ஒலி மாசை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

pollution rto sound
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe