சென்னை, தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தி.மு.கவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா அவர்கள் எழுதிய "2ஜி அவிழும் உண்மைகள்" என்னும் நூல் வெளியீட்டு விழா, நடைபெற்றது.
கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் தலைமையில் நடைப்பெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன், கவிஞர்.வைரமுத்து, தமிழ் இந்து நாளிதழில் பதிப்பாசிரியர் இந்து என்.ராம், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட, அதன் முதல் பிரதியை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து விழாவில் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் பேசியதாதவது,
வரலாற்றில் பல வழக்குகள் உண்டு, ஒரு வழக்கே வரலாறானது என்றால் அது 2ஜி வழக்கில் தான். 2ஜி வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்ததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை, மேல்முறையீடு செய்யாமல் விட்டு விடுவதற்கு இது என்ன சங்கரராமன் கொலை வழக்கா? என கேள்வி எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து விழாவில் பேசிய இந்து என்.ராம், 2ஜி வழக்கில் எடுத்து கொண்ட சுறுசுறுப்பை வியாபம் ஊழல் வழக்கில் மத்திய அரசு காட்டவில்லை. ஊழலலுக்கு எதிரான வழக்குகள் நம் நாட்டில் எப்படி நடக்கிறது. யார் மூலம் நடத்தப்படுகிறது என ஆராய்ந்தால் நாம் அதில் தத்துவ ஞானியாக மாறிவிடும் அபயாம் உள்ளது. தங்களை எதிர்ப்பவர்களுக்கு அழுத்தம் தர மட்டுமே மத்திய அரசு சி.பி.ஐ, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது என கூறினார்.
இதனையடுத்து விழாவில் பேசிய கவிஞர்.வைரமுத்து, திராவிட இயக்கத்தை அழிக்க ஊதி பெரிதாக்கியதே 2ஜி வழக்கு என்றும், ஆற்றின் நீரோட்டத்தில் குப்பைகளும், அழுக்குகளும் வந்து போகும், ஆனால் திராவிட இயக்கம் என்ற ஜீவநதி என்றும் அழியாது என தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வளைதளங்களில் யாரோ ஒரு ராஜா கருத்தினை தெரிவிப்பதாக பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவை மறைமுகமாக விமர்சித்த அவர், இணையத்தையே அலைபேசியில் விரைவாக வர வழி வகை செய்தவர் இந்த ஆ.ராசா என தெரிவித்தார்.
பின்னர் பேசிய ஆ.ராசா, 2ஜி அலைக்கற்றை ஊழல் ஆரம்பத்திலேயே என்னால் மறுக்கப்பட்டது. என்னை விசாரித்தவர்களுக்கு 2ஜி ஸ்பெக்டரம் என்றால் என்ன என தெரியவில்லை. அதை நான் விளக்கினாலும் 2ஜி என்றால் என்ன என்று அவர்களுக்கு புரியவில்லை. இறுதியல் நான் ஊழல் செய்ததாக கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் 15 முறை ஆஜராகி விளக்கம் அளித்தேன். நானே நீதிமன்ற மேடை ஏறி சொன்னால் மட்டுமே இதன் உண்மை வெளிவரும் என்பதற்காகவே வழக்கில் நானே வாதாடினேன். இதனை தவறாகக் கணித்துள்ளார் வினோத்ராய். இறுதியில் 2ஜி வழக்கில் ஊழல் செய்யப்படவில்லை என்று நிரூபனமானது. சி.பி.ஜ. தரப்பில் சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்காத காரணத்தால் இந்த வழக்கை யூகத்தின் அடிப்படையில் தாக்கல் செய்துள்ளதாக ஓ.பி.ஷைனி இவ்வழக்கின் தீர்ப்பினை வாசித்தார்.
அதன் அடிப்படையில், இந்த வழக்கில் என்னையும், கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்தனர். இதுவரை யாரும் நான் எழுதிய புத்தகத்திற்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்யவில்லை இதுவே என் புத்தகத்திற்கு கிடைத்த வெற்றி என அவர் கூறினார்.
பின்னர், ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை என்ற பாடலை பாடி தன் உரையை ஆரம்பித்தார் மு.க.ஸ்டாலின், இந்த விழா தி.மு.க.வின் விடுதலை விழா. ராசாவின் விடுதலை மட்டுமல்ல, என் தங்கை கனிமொழியின் விடுதலை, கலைஞர் டி.வி.யின் விடுதலை, ஏன் இதை தி.மு.க.வின் விடுதலையாகவே நான் பார்க்கின்றேன்.
1959 ஆண்டின் விதிமுறைப்படி எந்த அடிப்படையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கப்பட்டதோ அதே அடிப்படையில் தான் ஆர்.ராசவும் ஒதுக்கியுள்ளார். இருப்பினும் இந்த விவகாரத்தினால் நாடளுமன்றத்தை எதிர்கட்சிகள் பலமாக முடக்கினார்கள். எனவே உடனடியாக கலைஞர் ராசாவை அழைத்து ராஜினாமா செய்யச் சொன்னார். உடனே ராசவும் ராஜினாமா செய்தார்.
இது போன்று தற்போது மத்தியில் நடக்கும் பல ஊழல்களுக்கு குற்றம் நிரூபிக்கப்படாத போதிலும், இப்போதைய எம்.பி.க்களோ, அமைச்சர்களோ தைரியமாக ராஜினாமா செய்வார்களா? அதனையும் செய்து இவ்வழக்கில் ஆளும் தரப்பின் சாட்சியங்களையும், சி.பி.ஐ.தரப்பு வாதங்களையும் திணறடித்து பின் வாங்க செய்து திறம்பட வாதடிய ஒரே முன்னாள் எம்.பி ஆ.ராசா மட்டுமே.
இதன் மூலம் திமுகவின் மீது சுமத்தப்பட்ட பழி நீங்கியிருக்கிறது. விமர்சனம் செய்தவர்கள் வாய் அடைத்து மறைந்து நிற்கிறார்கள். விடுதலை பெற்றவர்கள் வெளியே வலம் வருகிறார்கள் என அவர் கூறினார்.
என்னை விசாரித்தவர்களுக்கு 2ஜி என்றால் என்ன என்பதே தெரியவில்லை: புத்தக வெளியீட்டில் ஆ.ராசா பேச்சு!
சார்ந்த செய்திகள்
Next Story
'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.
அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.
மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.
இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.
Next Story
'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து
18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.
ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய்.
— M.K.Stalin (@mkstalin) April 27, 2024
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.
ஆனால்,…