/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/shoot 450.jpg)
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைதானே சரியாக இருக்கும்?என்று சென்னை ஐகோர்ட் தமிழக அரசு வழக்கறிஞருக்கு கேள்வி எழுப்பியது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தடய அறிவியல் துறை நிபுணர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் ரஜினிகாந்த் என்பவர் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு இன்று விசாரணை நடத்தியது.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
அப்போது அந்த அமர்வு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைதானே சரியாக இருக்கும்?என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கு கேள்வி எழுப்பியதோடு, தமிழக அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
Follow Us