Skip to main content

சிக்கித் தவிக்கும் அதிகாரிகள்; திருவண்ணாமலை பரபரப்பு! 

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

Thiruvannamalai higher officials had over work load

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நவம்பர் 27 ஆம் தேதி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்த 12 நாள் திருவிழாவிற்கான ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

 

திருவண்ணாமலைக்கு வரும் ஒன்பது சாலைகளிலும் தற்காலிக பேருந்து நிலையம், கிரிவலப் பாதையில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, தற்காலிக பேருந்து நிலையங்களில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம், தனியார் வாகனங்கள் நிறுத்துமிடம் போன்றவற்றை மாவட்ட நிர்வாகம் வருவாய்த் துறையுடன் சேர்ந்து செய்து வருகின்றது.

 

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் போன்றவற்றை நகராட்சியுடன் இணைந்து நெடுஞ்சாலைத்துறை செய்து வருகின்றது. அறநிலையத்துறை கோவில் தேர்களைச் சீரமைப்பது உள்ளிட்ட கோவில் பணிகளைச் செய்து வருகின்றன.

 

தீபத் திருவிழாவின் ஏற்பாடுகளை மேற்பார்வையிடவும் ஆலோசனைக் கூட்டத்திற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நவம்பர் 16 ஆம் தேதி திருவண்ணாமலை வருகிறார். பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு இருவரும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துகின்றனர்.

 

இந்நிலையில் நவம்பர் 16 ஆம் தேதி நாடு முழுவதும் குறிப்பிட்ட இடங்களில் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ்  கட்டப்பட்ட வீடுகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் கோவிலூர் கிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொள்கிறார்.

 

அதே நவம்பர் 16 ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் நடைபெறும் கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகளுக்கான நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்துகொள்கிறார்.

 

இந்நிலையில் காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் நவம்பர் 15 ஆம் தேதி திருவண்ணாமலைக்கு வருகை தந்துள்ளார். கார்த்திகை தீபத்திற்கு  காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் அடுத்து செய்யவேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளார். 

 

ஒரே நாளில் கவர்னர், சபாநாயகர் அப்பாவு, இரண்டு முக்கிய அமைச்சர்கள், காவல்துறை தலைவர் போன்றவர்கள் திருவண்ணாமலையில் முகாமிடுகின்றனர்.  

 

கவர்னருக்கு புரோட்டாக்கால்படி மாவட்ட உயர் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் வரவேற்பு தரவேண்டும். அதே நேரத்தில் பல லட்சம் மக்கள் கலந்துகொள்ளும் பிரபலமான திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள் கலந்துகொள்கிறார்கள். இதில் உயர் அதிகாரிகள் முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொள்ள வேண்டும். 

 

இந்த நிகழ்ச்சிகளால் காவல்துறை எப்படி பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்டவற்றால் திணறி வருகிறது. மாவட்ட அதிகாரிகள், அமைச்சர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதா? கவர்னர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதா? எனத் தெரியாமல் தவிக்கின்றனர் உயர் அதிகாரிகள். 

 

அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் கவர்னர், சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் அரசு மீது மறைமுகமாக குற்றம் சாட்டி வருகிறார். தனக்கான ஏற்பாடுகள் சரியாக செய்யவில்லை என அரசு மீது குற்றம் சாட்டி பரபரப்புகளை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளவில்லை என்றாலோ அல்லது ஏதாவது குளறுபடி நடந்தாலோ கவர்னர் எப்படி தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துவார் எனத் தெரியவில்லையே என அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சித்ரா பௌர்ணமி; அரசு போக்குவரத்துக் கழகம் முக்கியத் தகவல்! 

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Chitira Poornami Govt Transport Corporation Important Information

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “23.04.2024 (செவ்வாய் கிழமை) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 22/04/2024 அன்று 527 பேருந்துகளும் மற்றும் 23/04/2024 அன்று 628 பேருந்துகளும்  இயக்கப்பட உள்ளன.

மேலும் சென்னை மாதவரத்திலிருந்து 22/04/2024 அன்று 30 பேருந்துகளும் 23/04/2024 அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அதே போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 அன்று 910 பேருந்துகளும் 23/04/2024 அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.