Skip to main content

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஆதரவாக வலுக்கும் போராட்டம்! 3 நாட்களாகப் பெருகும் ஆதரவு!

Published on 07/06/2020 | Edited on 08/06/2020

 

THAMIMUN ANSARI


தாயகம் திரும்பத் தவிக்கும் வெளிநாடு வாழ் தமிழர்களை அரசு செலவில் அழைத்து வரக்கோரி ஜூன் 5, 6 மற்றும் 7 ஆகிய மூன்று தினங்களில் சமூக இடைவெளியுடன் பதாகை ஏந்தி, வலைத்தளங்களில் பதிவிடும் போராட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று 3ஆவது நாளாக நடந்தது. 
 


நாகை மாவட்டம் திருப்பூண்டியில் நடைப்பெற்ற போராட்டத்தில் பங்கேற்று செய்தியாளர்களைச் சந்தித்த, ம.ஜ.க. பொதுச் செயலாளரும், அத்தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான மு.தமிமுன் அன்சாரி கூறியதாவது,

வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பலர் கரோனா நெருக்கடியால் வருமானம் இழந்து தாயகம் திரும்பத் துடிக்கிறார்கள். அங்குள்ள இந்தியத் தூதரகங்கள் உரிய முறையில் உதவவில்லை என்ற புகார்கள் அதிகரித்து வருகிறது.

பிரதமர் மோடி அவர்கள், கரோனா தொடர்பில் அறிவித்துள்ள 20 லட்சம் கோடியில் 1,000 கோடியை ஒதுக்க வேண்டும். தமிழ் நாட்டுக்கு திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கு கூடுதல் விமான சேவைகளை வழங்கவும், கப்பல்களை இயக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவர்களின் விமானம் மற்றும் கப்பல் செலவை மத்திய அரசு ஏற்க வலியுறுத்த தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும். தேசிய பேரிடர் நிவாரண நிதி, பிரதமர் நல நிதி (PM CARE FUND) ஆகியவற்றிலிருந்து மத்திய அரசு இதற்கு நிதி ஒதுக்க முடியும். நம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில், அவர்கள் ஈட்டிய அன்னிய வருவாய் பெரும் பங்காற்றியுள்ளது. இதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
 

 

 

mjk


அமெரிக்கா - ஈராக் இடையே முதல் வளைகுடா போர் நடந்தபோது ஒரே மாதத்தில் அன்றைய பிரதமர் சந்திரசேகர் அவர்கள் 1 லட்சத்து 70 ஆயிரம் பேரை திரட்டி வந்தார். ஒரு பலஹீனமான அரசியல் சூழலில் இருந்த அன்றைய ஜனதா தள பிரதமர் சந்திரசேகர் செய்ததை, இன்றைய பிரதமரால் செய்ய முடியாதா? 

ஆசிய நாடுகளில் வேலை செய்யும் தமிழர்களில் 1 லட்சம் பேர் ஊர் வர விரும்பினால், ஒரு நபருக்கு 15 ஆயிரம் மட்டுமே டிக்கேட் செலவாகும். இதற்கு 150 கோடி செலவாகும். ஐரோப்பாவிருந்து 10 ஆயிரம் பேர் ஊர் திரும்ப விரும்பினால், ஒருவருக்கு 30 ஆயிரம் எனில், 30 கோடி செலவாகும். அமெரிக்க, ஆஸ்திரேலியா கண்டங்களிலிருந்து 10 ஆயிரம் பேர் ஊர் திரும்ப விரும்பினால், ஒருவருக்கு 75 ஆயிரம் செலவாகும். இதற்கு 75 கோடி செலவாகும். இதற்கு மொத்தமே 255 கோடி ரூபாய் தான் செலவாகும். 
 

mjk


மத்திய அரசு இதைத் தர மறுத்தால், தமிழக அரசு அந்த செலவை ஈடுகட்ட வேண்டும். டாஸ்மாக் மூலம் ஒரு நாளைக்கு 85 கோடி வருமானம் உள்ள நிலையில், இதை ஒப்பிடும் போது மூன்று நாள் டாஸ்மாக் வருமானமே போதுமானது. இவ்வாறு பேட்டியளித்தார்.

இப்போராட்டத்தின்போது பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் நின்றவாறு பதாகை ஏந்தி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். கரோனா உச்சத்தில் இருக்கும் ஊரடங்கு நிலையிலும் இக்கோரிக்கைக்காக பொதுமக்கள் வீதிகளிலும், வீட்டு வாசல்களிலும் திரள்வது கவனிக்கதக்கது. உலகம் எங்கும் வாழும் தமிழக மக்கள் ம.ஜ.க.-வின் இக்கோரிக்கையை தமிழகத்திலும், உலகின் பல நாடுகளிலும் ஆதரித்து குரல் எழுப்பி வருகின்றனர்.
 

http://onelink.to/nknapp


பல்வேறு சமுதாய மக்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். சமூக வலைத்தளங்களையும் தாண்டி, ஊடகங்களிலும் இது விவாதமாகி வருகிறது. மூன்றாம் நாளான இன்று தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் நகரங்கள், கிராமங்கள் தோறும் போராட்டங்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் நடைப்பெற்று வருகிறது எனத் தெரிவித்தனர் ம.ஜ.க.வினர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.