Skip to main content

காஷ்மீர் விஷயத்தில் மோடி அரசு 100 சதவீதம் தோல்வி: தமிமுன் அன்சாரி 

Published on 09/05/2018 | Edited on 09/05/2018
thirumeni


காஷ்மீர் விஷயத்தில் நரேந்திரமோடி அரசு 100 சதவீதம் தோல்வி அடைந்திருக்கிறது என்று மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏவுமான மு.தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
 

சென்னை ஆவடிவைச் சேர்ந்த ராஜவேல் தனது மனைவி செல்வி, மகன் திருமணிசெல்வம் (23) ஆகியோருடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றார். ஸ்ரீநகர் பகுதியை சுற்றி பார்ப்பதற்காக நேற்று முன்தினம் அனைவரும் பஸ்சில் பயணம் செய்தபோது அங்கு நடந்த மோதலில் கற்கள் வீசப்பட்டன. ராஜவேல் குடும்பத்தினர் சென்ற பஸ் மீதும் சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் திருமணிசெல்வத்தின் தலையில் அடிபட்டதில் அவர் உயிரிழந்தார். 
 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில்,
 

இந்தியாவின் சுவட்சர்லாந்து என்று சொன்னால் அதுதான் காஷ்மீர். பனி படர்ந்த மலை தொடர்களும், அழகிய பசுமை மரங்களும், பள்ளத்தாக்குகளும், ஆப்பிள் மரங்களும், குங்குமப் பூச்செடிகளும் காஷ்மீரின் அழகை கண் முன்னால் கொட்டுகின்றன.
 

அந்த அழகிய காஷ்மீர் இப்போது இந்திய படைகளின் மனித உரிமை மீறல்களாலும், போராட்டக்காரர்களின் கல்வீச்சு சம்பவங்களாலும் ரத்தத் துளிகளோடு காட்சி அளிக்கிறது.
 

modi


 

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அமைதியை நிலைநாட்டுவோம் என்றும், உலக சுற்றுலா பயணிகளை காஷ்மீரில் நிரப்புவோம் என்றும் பா.ஜ.க.வினர் பிரச்சாரம் செய்தார்கள். இன்று அவர்களின் கூட்டணி ஆட்சிதான் நடக்கிறது. முன்பைவிட இப்போது கல்வீச்சு சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. போராட்டங்கள் கிராமங்கள், நகரங்கள் எங்கும் நடந்து வருகிறது. காஷ்மீர் விஷயத்தில் நரேந்திரமோடி அரசு 100 சதவீதம் தோல்வி அடைந்திருக்கிறது.
 

கோவிலின் கருவரைக்குள்ளேயே பாஜகவின் ஆதரவாளர்கள் ஆஷிபா என்ற 8 வயது பிஞ்சு பூவை கூட்டு பலாத்காரம் செய்திருக்கிறார்கள். காவல்துறையில் சிலரும், பா.ஜ.க. அமைச்சர்களில் சிலரும் பகிரங்கமாக இதற்கு ஆதரவு கொடுத்த வெட்கக்கேடு நடந்திருக்கிறது.

 

thamimun ansari


 

பா.ஜ.க. கூட்டணி ஆட்சியான ஜம்மு காஷ்மீரில் சட்டம் - ஒழுங்கு மிக மோசமாக சீரழிந்திருக்கிறது. அதற்கு மற்றொரு உதாரணம், நமது அன்பு தம்பி திருமணி என்ற ஒரு தமிழரை பறிகொடுத்திருக்கிறோம். சுற்றுலா சென்ற ஒருவருக்கு பாதுகாப்பற்ற நிலை காஷ்மீரில் நிலவிக்கொண்டிருக்கிறது. நரேந்திரமோடி மற்றும் பா.ஜ.க. கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பறந்துவிட்டது.
 

நமது அன்பு திருமணி துயர மறைவுக்கு நாங்களும் கண்ணீர் சிந்துகின்றோம். அந்த குடும்பத்தின் மீளா துயரத்தில் உணர்வோடும், உரிமையோடும் பங்கேற்கின்றோம். இதுபோன்று எந்த உயிரும் இனி காஷ்மீர் மண்ணில் பலியாகக்கூடாது. காஷ்மீரில் மக்கள் உதவியோடு அமைதியை நிலைநாட்ட முன்வர வேண்டும். துப்பாக்கி முனையில் சமாதானத்தை பேசக்கூடாது. மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் மதிக்கும் வண்ணம் அங்கு பேச்சுவார்த்தைகளை நடத்தினால் அமைதியை நிலைநாட்ட முடியும். இவ்வாறு கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.