rukku live

விலங்குகளில் மிகப்பெரியது யானை. அதற்கு கோபம் வந்தால் ஒரு ஊரையே அழித்துவிடும் அந்த அளவுக்கு பலம் வாய்ந்த யானைக்கு அதன் பலம் அதற்கே தெரியாது என்பார்கள். அது உண்மை தான் போல. நாய் ஒன்று துரத்தியதில் 30 வயதான யானை ஓடியதில் அடிப்பட்டு ஹார்ட் அட்டாக் வந்து இறந்தது.

பிரபலமான திருவண்ணாமலை அண்ணாமலையார்கோயில் யானை ருக்கு, பிரம்ம தீர்த்தம் அருகே கட்டிவைக்கப்பட்டு தினமும் பக்தர்களுக்கு ஆசி வழங்கும். இதற்கு முன்பிருந்த யானை செந்தில்வடிவுக்கு மதம் பிடித்ததால் அந்த யானை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின்பே ருக்கு அண்ணாமலையார் கோயிலுக்கு வந்தது. யானைருக்கு 30-4-1988ம்ஆண்டுபிறந்தது. அதற்கு 7 வயதாகும்போது ரூபாய் 5 ஆயிரத்துக்கு வாங்கி வனத்துறை மூலம் 1995ஆம்ஆண்டுமறைந்தமுன்னால்முதல்வர்ஜெயலலிதாஅண்ணாமலையார்கோவிலுக்குதானமாக வழங்கினார். காட்டில் இருந்து வந்து கோயில் யானையாக வளர்ந்து வந்தது. தற்போது அதன் வயது 30.

Advertisment

தமிழகஅரசுசார்பில்நடத்தப்படும்நல்வாழ்வுமுகாமிற்கு சென்றதுகடந்த மாதம் தான் திரும்பிவந்தது. இந்நிலையில் 5 டன்எடைகொண்டகோவில்யானைருக்கு 21ந்தேதி இரவு, வழக்கம்போல்கோவில்யானைமண்டபத்தில்யானைகட்டிஇருந்தபோதுநாய்யானையின்காலுக்குஅடியில்சென்றது. இதனால் பயந்துபோனருக்கு கத்தியது. நாயை விரட்டிவிட்டு யானைபாகன்கள்அருகில்உள்ளயானைபாராமரிக்கும்மண்டபம்அருகில் ருக்குவைவாக்கிங்அழைத்து சென்றனர். அப்போது நாய்மீண்டும் யானை அருகே வந்ததால்மிரண்டுபோனருக்குஅருகில்உள்ளஇரும்புகம்பம் மீது இடித்ததில்இடதுகண்ணில்பலத்தகாயம்அடைந்து. உடனே மருத்துவர்களை அழைத்து வந்து சிகிச்சை அளித்துள்ளனர்.

rukku death

Advertisment

இரவு 12.30க்கு நெஞ்சுவலி வந்து யானை ருக்கு துடிதுடித்தது. தகவல்அறிந்துசம்பவஇடத்திற்குமீண்டும் வந்தகால்நடைமருத்துவர்கள்கோவில்யானைருக்கு இறந்தாகஅறிவித்தனர். இதனைதொடர்ந்துகோவில்இணைஆணையர்ஜெகன்நாதன்உள்ளிட்டஅதிகாரிகள்கோவில்யானைருக்குமாலைஅணிவித்துமரியாதைசெலுத்தினர்கள்.

இதனைதொடர்ந்துஇன்றுகாலைமுதல்பக்தர்கள்அஞ்சலிக்குவைக்கப்பட்டுபின்னர்கோவிலின்வெளிபுறசுற்றுசுவர்பக்கத்தில்நல்லடக்கம்செய்யப்படும்எனதிருக்கோவில்சிவாச்சாரியார்கள்தெரிவித்துள்ளனர். இன்றுவழக்கம்போல்அண்ணாமலையார்கோயில் நடைதிறக்கப்படும். ஆனால்ருக்குநல்லடக்கத்திற்குபின்னரே சுவாமிக்கு பூஜைகள்நடைபெறும்என்பதுகுறிப்பிடத்தக்கது.

மார்ச் 22ந்தேதி மதியம் 12 மணி வரை நூற்றுக்கணக்கான அண்ணாமலையார் பக்தர்க்ள் ருக்குவுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பின்பு கிரேன் மூலம் அது இறந்த இடத்தில் இருந்து அகற்றி கோயிலின் மற்றொரு புறத்தில் அதனை நல்லடக்கம் செய்தனர்.

ருக்குவின் தாய் முதுமலையில் வயதான நிலையில் உள்ளது. ருக்குவின் அண்ணன் வனத்துறையால் கும்கியாக பயிற்சி வழங்கப்பட்டு முரட்டு யானைகளை அடக்கும் யானையாக தில்லாக வலம் வந்துக்கொண்டுள்ளது. ருக்குவோ நாய்க்கு பயந்துப்போய் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.