Advertisment

கரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் இன்று தமிழகத்தில் திறக்கப்பட்டன. கரொனா தொற்று அதிவேகமாக பரவி கொண்டிருக்கும் வேலையில் தமிழக அரசு டாஸ்மாக் கடையை துவங்கி இருப்பது தாய்மார்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத தாய்மார்கள் சென்னை அருகே பொன்னேரியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி முற்றுகையிட்டனர். அப்போது காவல்துறையினரோடு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.