2020-21 ஆம் ஆண்டுக்கான ஐபிஎஸ் பதவி உயர்வுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. அதன் படி தமிழகத்தில் 43 போலீஸ் அதிகாரிகளுக்கு டிஐஜி உள்ளிட்ட பதவி உயர்வு வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல் நான்கு டிஜிபிக்கள் வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், 3 டிஜிபிக்கு மட்டுமே அனுமதியளித்துள்ளது.