Skip to main content

தமிழக காங். தலைவர்கள் ஒருவருக்கு கூட டெபாசிட் வாங்கும் தகுதி இல்லை! ராகுலுக்கு ஜான்சிராணி புகார் மனு!

Published on 12/03/2021 | Edited on 12/03/2021

 

Jhansirani

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மகிளா தலைவர் ஜான்சிராணி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

 

அதில் கூறியிருப்பதாவது, “நிலக்கோட்டை தொகுதி மக்களால் பலமுறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொகுதி மக்களுக்கு அயராது தொண்டாற்றி, காங்கிரஸ் கட்சியின் அடையாளமாக மிளிர்ந்த எனது பாட்டி ஏ.எஸ்.பொன்னம்மாள் அவர்களை சிறு வயது முதல் பார்த்து வளர்ந்து, அவர் வழியில் மக்கள் பணியாற்றிட காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தவள் நான். 

 

எனது  பாட்டி அவர் ஆற்றிய தொண்டிற்காகவே 1957-1996 வரையிலான காலகட்டங்களில் ஏழுமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பழனி, சோழவந்தான் தொகுதிகளில் தலா ஒருமுறையும் நிலக்கோட்டைத் தொகுதியில் 5 முறையும் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

 

தற்காலிக சபாநாயகராக இருந்து கலைஞர், ஜெயலலிதாவிற்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்த பெருமையும் அவருக்கு உண்டு. பல்வேறு பதவிகளும் வாய்ப்புகளும் வந்தபோதும் அதை ஏற்காமல் நிலக்கோட்டைத் தொகுதிக்காகவே சேவை செய்தார். நிலக்கோட்டைத் தொகுதியில் நிகழ்ந்துள்ள அத்தனை வளர்ச்சிப் பணிகளிலும் அவரது உழைப்பு இருக்கிறது. கிராமப்புறங்களுக்கு சாலை வசதி, போக்குவரத்து வசதி, பள்ளிக்கூடங்கள், சமூகக் கூடங்கள், நீர் ஆதாரங்கள், வீடுகள் மற்றும் தொழில் வாய்ப்புகளை அவர் உருவாக்கிக் கொடுத்தார். 

 

நிலக்கோட்டையில் உள்ள பெண்கள் கல்லூரி அவரது கனவுத் திட்டம். கிராமப்புற பெண்கள் மேற்படிப்பிற்காக தொலைவில் உள்ள கல்லூரிகளுக்குப் போக முடியாததால் பள்ளியோடு நின்றுவிடுவதைத் தடுக்கும் வகையில், அவர் நிலக்கோட்டையில் பெண்கள் கல்லூரி கொண்டு வர பெரும் முயற்சிகள் எடுத்தார். அப்போதிருந்த தி.மு.க அரசுக்கு அழுத்தம் கொடுத்து தொகுதி மக்கள் மற்றும் நல விரும்பிகளிடம் சேகரித்த மற்றும் சொந்தப் பணத்தை வைத்து அவர் நிலக்கோட்டை கிராமப்புற பெண்கள் கல்லூரியைத் தோற்றுவித்தார். இன்று அதில் ஆயிரக்கணக்கானப் பெண்கள் பயின்று வருகின்றனர். தொகுதியின் நலத் திட்டங்களுக்காக தனது சொத்துக்களை விற்று  தனது சொந்தப் பணத்தை செலவு செய்தார். 

 

அது மட்டுமல்ல, பின் தங்கிய நிலையில் உள்ள கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளை எந்த பிரதிபலனுமின்றி வாங்கிக் கொடுத்தார். இறுதிவரை ஊழலற்ற அரசியல்வாதியாக இருந்து கட்சி பேதமின்றி அனைவரும் மதிக்கும் தலைவராக வாழ்ந்து மறைந்தார். கர்ம வீரர் காமராஜருக்கு இணையான வகையில் எளிமையாகவும் நேர்மையாகவும் அரசியல் தொண்டாற்றியவர், தனது இறுதி காலத்தில் நோய்வாய்பட்டிருந்தபோதும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டவர் எனது பாட்டி  ஏ.எஸ்.பொன்னம்மாள். இதை அறிந்த காங்கிரஸ் தலைவர் பெரும் மதிப்பிற்குரிய ராகுல் காந்தி தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறியதோடு பாட்டியைத் தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்கவும் முன் வந்தார். அது மட்டுமல்லாமல் அவரது மறைவிற்குப் பிறகு என்னை தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராகவும் நியமனம் செய்து மக்கள் பணியாற்றிட வாய்பளித்தார் ராகுல் காந்தி. 

 

எனது பாட்டியின் வழியில் நானும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக நிலக்கோட்டைத் தொகுதியில் நற்பணிகள் செய்து வருகிறேன். கட்சி பாகுபாடின்றி எனது பாட்டியைப் போலவே தொகுதி மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறேன். நிலக்கோட்டைத் தொகுதி மக்கள் என்னை எனது பாட்டியின் உருவாகவே பார்க்கிறார்கள். நிலக்கோட்டைத் தொகுதியைப் பொறுத்தவரை ஏ.எஸ்.பொன்னம்மாள் என்பது வெறும் பெயரல்ல; நிலக்கோட்டையின் பெருமைமிகு அடையாளம். 

 

ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நபர்கள் இத்தகைய வரலாறு எதையும் கவனத்தில் கொள்ளாமல் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து நின்று வெல்ல வாய்ப்புள்ள ஒரே தொகுதியான நிலக்கோட்டை தொகுதியைக் காங்கிரஸுக்கு பெறுவதில் சிறிதும் கவனம் செலுத்தவில்லை என்பது நிலக்கோட்டை மக்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.

 

தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தமது வாரிசுகளுக்கும், மாமனார், மாமியார் உள்ளிட்ட உறவினர்களுக்கு ’சீட்’ பிடிப்பதிலும், கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட 25 இடங்களில் ஓரிரு இடங்களைக் கூட கட்சிக்காக உழைக்கும் நபர்களுக்கு வாய்ப்பளிக்கும் பொறுப்புணர்வு இல்லாமலும் செயல்படுவது உண்மையான காங்கிரஸ் தொண்டர்களுக்கு கடும் வேதனையை அளிக்கிறது. 

 

தமிழ்நாட்டில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தனித்துப் போட்டியிட்டாலே வெல்லக்கூடிய தொகுதிகள் உண்டு. தலைவர்களும் உண்டு. ஆனால் இந்த இரு கட்சிகளை விட பாரம்பரியம் உள்ள காங்கிரஸ் இயக்கத்தில் இத்தனை வருடம் இருந்து என்னைப் போன்ற சாமானிய தொண்டர்களின் உழைப்பில் பதவி சுகங்களை அனுபவித்து வரும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஒருவருக்கு கூட கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறும் - அவ்வளவு ஏன் டெபாசிட் வாங்கும் - தகுதி கூட இல்லை என்பது எத்தனை அவலமானது? அகில இந்திய தலைமை எதை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியதோ அதை மட்டுமே செய்வதைத்தான் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார்கள். 

 

சுயநல மற்றும் வாரிசு அரசியலை விட்டொழித்து, கட்சியின் நலனை முன்னிறுத்திப் பணி செய்ய வேண்டும் என ராகுல் காந்தி எதிர்பார்க்கிறார். அதற்காகவே அவர் உழைக்கிறார். ஆனால், ஜெயிக்க பெரும் வாய்ப்புள்ள நிலக்கோட்டை போன்ற தொகுதிகளை விட்டுக்கொடுத்து காங்கிரஸ் பேரியக்கத்தை படுகுழியில் தள்ளும் செயலைத் தலைவர் செய்கிறார்.

 

இந்தப் போக்கு என்னைப் போன்ற மக்கள் பணியாற்ற வந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம் தருவதாக உள்ளது. இனிமேலும் மவுனம் காப்பது என்பது நான் பணியாற்றும் நிலக்கோட்டை மக்களுக்கு செய்யும் துரோகமாகவே அமையும் என்று கருதுகிறேன். எனவே, எனது மக்களை சந்தித்து இன்னும் இரு நாட்களில் எனது அடுத்தகட்ட பயணம் குறித்து முடிவெடுக்க உள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இறுதி  மூச்சு உள்ளவரை நான் சார்ந்த நிலக்கோட்டை மக்களின் நலன்களுக்காக பணியாற்றுவேன்” என்று தனது மனுவில் தெரிவித்திருக்கிறார்.

 

தமிழக காங்கிரஸ் கமிட்டியைப் பற்றி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு ஜான்சிராணி புகார் மனு அனுப்பி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார். 

Next Story

“ராகுல் காந்தி மாவோயிஸ்ட் தலைவர் என்று நினைக்கிறாரா?” - தேவகவுடா தாக்கு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Deva Gowda crictizes Rahul gandhi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “எனக்கு சாதியின் மீது ஆர்வம் இல்லை. நியாயத்தின் மீதுதான் ஆர்வம். ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பதை சாதியை கணக்கெடுப்பது என்று நினைக்க வேண்டாம். அதில் பொருளாதார மற்றும் நிறுவனக் கணக்கெடுப்பையும் சேர்ப்போம். 70 ஆண்டுகளுக்குப் பிறகு இது ஒரு முக்கியமான படியாகும். இப்போது நிலைமை என்ன?, எந்தத் திசையில் இருக்க வேண்டும்? என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். இதைச் செயல்படுத்துவோம். 

25 கோடீஸ்வரர்களுக்கு 16 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பெரும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடியாக பாஜக அரசு வழங்கிய ரூ.16 லட்சம் கோடியை 90% மக்களுக்கு வழங்குவதே எங்கள் தேர்தல் அறிக்கையின் நோக்கம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பதே எனது கேரண்டி. சாதிவாரிக் கணக்கெடுப்பின்போது பொருளாதாரம் மற்றும் கல்வி குறித்தும் கணக்கெடுப்படும்” என்று கூறினார்.

இந்த நிலையில், முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தலைவர் தேவகவுடா தேர்தல் பரப்புரையில் மேற்கொண்டார். அப்போது அவர், “ராகுல் காந்தி சொத்துக் கணக்கெடுப்பு நடத்தி செல்வத்தை மறுபங்கீடு செய்ய விரும்புகிறார். அவர் ஒரு மாவோயிஸ்ட் தலைவர் என்று நினைக்கிறாரா? அவர் ஒரு புரட்சியைக் கனவு காண்கிறாரா?. சொத்து மறுபங்கீடு பற்றி பேசிய ராகுல் காந்தி, சந்தை சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து இந்த நாட்டின் செல்வத்தை உயர்த்திய இரண்டு காங்கிரஸ் பிரதமர்களை அவமதித்து அவமானப்படுத்தியுள்ளார். இரண்டு காங்கிரஸ் பிரதமர்களும் செய்ததெல்லாம் தவறு என்று மறைமுகமாக சொல்ல முயல்கிறார். மன்மோகன் சிங் அரசு பிறப்பித்த அரசாணையைக் கிழித்தெறிந்தது போல் அவர்களின் பொருளாதார சீர்திருத்தங்களைக் கிழித்தெறிந்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.