சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இன்று (04/05/2020) மாலை 05.00 மணிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி. கரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு தளர்வுகள், உள்ளிட்டவை பற்றி ஆளுநருடன் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் கூறுகின்றன. கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநரைத் தமிழக முதல்வர் இரண்டாவது முறையாகச் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.