'கரோனா நோயாளிகளுக்கு தனிப்பாதை'- தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவு!

tamilnadu chief secretary all districts collectors circular

நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் கரோனா பாதிப்புடன் வருவோருக்கு தனிப்பாதை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு கரோனா பரவாமல் தடுக்க புதிய நடைமுறையைப் பின்பற்றவேண்டும். நோயாளி காத்திருப்பு அறை, இருக்கைகள், கழிவறையை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

cheif secratary District Collectors SHANMUGAM Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe