தமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர். ராஜகோபால் இன்று (21/11/2019) காலை 10.30மணியளவில்பதவியேற்றுக் கொண்டார்.
கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், ஆர். ராஜகோபாலுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தலைமை தகவல் ஆணையராக பதவியேற்று கொண்ட ஆர். ராஜகோபால் தமிழக தலைமை ஆணையராக மூன்று ஆண்டுகள் பதவி வகிப்பார். இந்த விழாவில் உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர். ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால், தலைமை தகவல் ஆணையராக அண்மையில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.