நெல்லையில் இருந்து புதியதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேரில் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 33- வது மாவட்டமாக தென்காசி மாவட்டம் உதயமாகியுள்ளது.
தென்காசி மாவட்ட தொடக்க விழா தென்காசி இசக்கி மஹால் வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார் , தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண்சுந்தர தயாளன், தலைமை செயலாளர் சண்முகம், உயரதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
மேலும் தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், ஆலங்குளம், கடையநல்லூர், சிவகிரி, வி.கே.புத்தூர், திருவேங்கடம் ஆகிய 8 தாலுகாக்களும் தென்காசியில் வருகின்றன. அதேபோல் தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய இரு வருவாய் கோட்டங்களும் தென்காசி மாவட்டத்தில் வருகின்றன.