11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்தி வருகிறார். எம்.எல்.ஏ.க்கள் பாண்டியராஜன், நடராஜன், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவளித்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.சோளிங்கர் பார்த்திபன் ஆகியோரிடம் தனது வீட்டில் இருந்து காணொளியில் சபாநாயகர் விசாரணை நடத்தி வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக ஓ.பி.எஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் வாக்களித்ததுப் பற்றி சபாநாயகர் விசாரணை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.