ன்ன்ன்

சென்னை ஆலப்பாக்கத்தில் சின்னத்திரை நடிகை நிலானி விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

Advertisment

கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலானியின் காதலர் காந்தி லலித்குமார் சென்னை கே.கே.நகரில் நடுரோட்டில் தற்கொலை செய்துகொண்டார்.நிலானி தன்னை திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக கூறி, தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

Advertisment

இந்த பரபரப்பான சூழ்நிலையில் காவல்நிலையத்தில் நேரில் ஆஜரான நிலானி,காந்தி்யின் தற்கொலைக்கு நான் காரணம் இல்லை. அவரை திருமணம் செய்வதாகத்தான் இருந்தேன். ஆனால், மதுப்பழக்கத்தினால் என்னிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டே இருந்தார். இதனால் மனம் வெறுத்து அவரிடம் இருந்து விலகினேன் என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, இதையே செய்தியாளர்களிடமும் கண்ணீர் மல்க தெரிவித்தார். மேலும், காந்தியுடன் தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வேண்டுமென்றே சமூக வலைத்தளங்களில் பரப்பி என் எதிர்கால வாழ்க்கையை நாசமாக்குமின்றனர் என்று குமுறினார்.

காந்தி தற்கொலை தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்,இன்று நிலானி தனது வீட்டில்விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment