நீட் தேர்வு முடிவுகள் நேற்று மாலை நான்கு மணிக்கு வெளியாகும் எனக்கூறப்பட்ட நிலையில், நேற்று மதியம் ஒருமணியளவிலேயே வெளியானது.

neet

Advertisment

Advertisment

இதில் நாடுமுழுக்க 56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழ்நாட்டில் 48 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் பலர் வருத்தத்திற்குள்ளாகினர். நேற்று திருப்பூரை சேர்ந்த ரிதுஸ்ரீ என்ற மாணவியும், தஞ்சாவூரைச்சேர்ந்த வைஷியா என்ற மாணவியும் தற்கொலை செய்துகொண்டனர். இது தமிழ்நாட்டில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள கூனிமேடு குப்பத்தில் மோனிஷா என்ற மாணவியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாணவர்கள் இப்படி செய்வது சரியல்ல என்றும், மாணவர்கள் மனதிடத்துடன் இருக்கவேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.