Skip to main content

அவதூறு பரப்பக்கூடாது... சிவசுப்பிரமணியத்துக்கு தடை விதித்த நீதிமன்றம்!

Published on 29/07/2021 | Edited on 29/07/2021

 

Slander should not be spread ... Court advice to Sivasubramaniam!

 

மூத்த பத்திரிகையாளர் என்று தன்னைத்தானே கூறிக்கொண்டு யூடியூப்பில் பேசி வருபவர் சிவசுப்பிரமணியம். சமீப காலங்களில் வீரப்பன் பற்றி நான்கு புத்தங்களையும் பதிப்பித்துள்ளார். அதில் அவர் ஏற்கனவே எழுதி வெளியிட்ட புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கு முற்றிலும் மாறாக வீரப்பனை சந்தித்த நிகழ்விலும், நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்டு, அவரை மீட்பதற்காக அரசாங்க தூதுவராக நக்கீரன் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற மீட்புப் பணிகள் குறித்தும் தவறான தகவல்களை எழுதியிருக்கிறார்.

 

அரசாங்கத்தின் சார்பாக அனுப்பட்ட நக்கீரன் ஆசிரியர் தலைமையிலான குழுவிற்கு பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை. பரிமாற்றப்படவில்லை என தனது ''பொய் வழக்கும் போராட்டமும்'' புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் சிவசுப்பிரமணியம். ஆனால் தற்போது வெளியாகியுள்ள புத்தகத்தின் மூன்றாம் பாகத்திலும் சமீபத்திய வீடியோ பதிவிலும் நக்கீரன் ஆசிரியர் பணம் கொண்டு சென்றதாகவும் அதில் பணம் குறைவாக இருந்ததாகவும் அதைப்பற்றி வீரப்பனும் அவனோடு இருந்தவர்களும் தன்னிடம் பேசியதாகவும் அப்பட்டமான குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கிறார்.

 

இது சட்டப்படி அவதூறு குற்றச்சாட்டாகும். ஏற்கனவே நக்கீரன் சார்பாக கொடுக்கப்பட்டிருக்கிற அறிவிப்பின்படி, அவர் நக்கீரனில் பணியாற்றிய காலத்தில் செய்துவந்த நடவடிக்கைகள் அனைத்துமே காப்பிரைட் சட்டத்தின்படி நக்கீரன் பத்திரிகைக்கு பாத்தியப்பட்டது. இந்தநிலையில் தமிழ் இந்து - காமதேனு பத்திரிக்கை பேட்டியின்போது நக்கீரன் ஆசிரியர் அனுப்பிய அறிவிப்பை பெற்றுக்கொண்டதாகவும் தான் நக்கீரனில் பணியாற்றிய காலத்தில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் அது சம்மந்தப்பட்ட நிகழ்வுகளை பற்றி பேசப்போவதில்லை என்றும் ஒத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் தற்போது நக்கீரன் ஆசிரியரிடம் ரஜினிகாந்த் பணம் கொடுத்து அதை ஆசிரியர் வீரப்பனிடம் கொண்டுபோனதாகவும் அதில் ரூபாய் 22 லட்சம் குறைந்திருந்ததாகவும் ஒரு செய்தியை உருவாக்கி தன்னுடைய வீடியோ பதிவில் கூறியிருக்கிறார்.

 

இந்த அவதூறு நடவடிக்கை சம்மந்தமாக இன்று சென்னை இரண்டாவது கூடுதல் மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இதுபோன்ற அவதூறு செய்திகளை வீடியோ மற்றும் யூடியூப் பக்கங்களில் பரப்பக்கூடாது என சிவசுப்பிரமணியம் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் என். மனோகரனுடைய வாதத்தையும், ஆவணங்களையும் பரிசீலனை செய்த நீதிமன்றம் சிவசுப்பிரமணியம் இனி இந்த விஷயத்தைப் பற்றிய வீடியோக்கள் எதையும் பதிவேற்றக்கூடாது என இடைக்கால உருத்துக்கட்டளை பிறப்பித்திருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.