சூட்டிங்கும் மீட்டிங்கும் ஒன்றாகிவிடாது, ரஜினிக்கு அரசியல் வரலாறு தெரியவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திரைத்துறை சார்பில் மறைந்த திமுக தலைவர் கலைஞருக்கு இரங்கல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், அதிமுக விழாவில் எம்.ஜி.ஆர் படத்துடன் கலைஞர் படத்தையும் வைக்க வேண்டும். கலைஞருக்கு மெரினாவில் இடம் தராமல் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன். கவர்னர்லிருந்து மற்ற மாநில முதல்வர்கள், தலைவர்கள் மெரினாவில் இருக்கும் பொழுது தமிழ்நாட்டின் முதல்வர் அங்கு இல்லாதது சரியா? என ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக இன்று சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது,
நினைவேந்தல் நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது என்பது ஆரோக்கியமான முறை அல்ல. கலைஞரின் நினைவேந்தல் கூட்டத்தில் ரஜினிகாந்த் அரசியல் பேசியது தவறு. ரஜினிகாந்திற்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என்று தான் நான் சொல்வேன். சூட்டிங்கும் மீட்டிங்கும் ஒன்றாகிவிடாது, ரஜினிக்கு அரசியல் வரலாறு தெரியவில்லை. அவர் ஒரு பகுதி நேர அரசியல்வாதியாக இருந்து முழுநேர அரசியல்வாதியாக மாறுவதற்காக இந்த நிகழ்ச்சியை பயன்படுத்தியுள்ளார்.
திமுக தொண்டர்களை தன்பக்கம் இழுக்க அதிமுகவை விமர்சித்திருக்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ரஜினி பேசியிருக்கிறார். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இருக்கும் போது இப்படி பேசியிருந்தால் ரஜினிகாந்தை பாராட்டலாம், அவர்கள் இல்லாத போது இப்படி பேசியிருப்பது அவரது சந்தர்ப்பவாதத்தை தான் காட்டுகிறது. இதே கருத்தை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இருக்கும் போது கூறியிருந்தால், ரஜினிகாந்த் தமிழத்தில் நடமாடியிருக்க முடியுமா?
அரசியல் பண்பாடு காரணமாகவே துணைமுதல்வர் தலைமையில் கலைஞர் வீட்டிற்கு நேரில் சென்றோம். அதன்பிறகு முதலமைச்சர் தலைமையில் ராஜாஜி அரங்கம் சென்றோம். அதன்பிறகு இறுதி அஞ்சலியில் அரசின் சார்பில் நான் கலந்துகொண்டேன். அரசின் சார்பில் அவர்களுக்கு உரிய மரியாதைகள் செலுத்தப்பட்டன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சூட்டிங்கும் மீட்டிங்கும் ஒன்றாகிவிடாது; ரஜினிகாந்திற்கு ஜெயக்குமார் பதிலடி
சார்ந்த செய்திகள்
Next Story
'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.
Next Story
திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு
திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.
இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது