Advertisment

முக்கொம்பு கொள்ளிடத்தில் 7 மதகுகள் உடைந்து வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன!

kallanai-dam-trichy

Advertisment

திருச்சி முக்கொம்பு கொள்ளிடத்தில் உள்ள 45 மதகுகளில் 7 மதகுகள் உடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

7 மதகுகள் உடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் அணையில் இருந்து 90,000 கன அடி நீர் வெளியேறி வருகிறது. இதனால், கொள்ளிடம் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1836 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் முக்கொம்பு மேலணை கட்டப்பட்டது. முக்கொம்பு அணையை சரிபார்க்க இரண்டு ஆண்டுகள் முன்னதாக ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Kollidam
இதையும் படியுங்கள்
Subscribe