Skip to main content

சாத்தான்குளம் இரட்டைக் கொலை! ஐ.ஜி.யின் அதிரடி ஆக்‌ஷன்! கைது செய்யப்பட்ட ஐவர்!

Published on 02/07/2020 | Edited on 02/07/2020


                

murugan

                          

சாத்தான்குளம் இரட்டைக் கொலைக்கு காரணமான போலீஸார் 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது சி.பி.சி.ஐ.டி.போலீஸ். காலதாமதமாக எடுக்கப்பட்டிருந்தாலும் இந்த அதிரடி நடவடிக்கை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.                       

 

இந்த நடவடிக்கைக்கு முன்பாக, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அருண்பாலகோபாலன் உட்பட பலரையும் இடமாற்றம் செய்தது எடப்பாடி அரசு. தென்மண்டலத்தின் புதிய ஐ.ஜி.யாக முருகன் நியமிக்கப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற அரசு முடிவு செய்த நிலையில், சி.பி.ஐ.-யில் ஏற்கனவே முருகன் பணியாற்றியிருப்பதால் அந்த அனுபவம் இந்த வழக்கைச் சரியான திசையில் கொண்டு செல்ல உதவும் என்கிற அடிப்படையில் தென்மண்டல ஐ.ஜி.யாக முருகன் நியமிக்கப்பட்டார் என ஐ.பி.எஸ். அதிகாரிகள் தரப்பில் எதிரொலித்தது. மேலும், இதே பதவியில் ஏற்கனவே முருகன் இருந்ததால் உண்மைகளைச் சமரசமின்றி வெளிக் கொண்டு வர உதவும் என்கிற அடிப்படையிலும் முருகன் தேர்வு செய்யப்பட்டார் எனவும் காவல்துறை வட்டாரங்களில் பேசப்பட்டது. 

 

இந்த நிலையில், தென் மண்டல ஐ.ஜி. பொறுப்பை ஏற்பதற்கு முன்பு, முதல்வர் எடப்பாடியைச் சந்தித்திருக்கிறார் முருகன். அந்தச் சந்திப்பில், ’’சாத்தான்குளம் போலீஸார்தான் குற்றவாளிகள் என்பது நிதர்சனமாக தெரிகிறது. சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்படுவது அவசியம். நீதிமன்றமும் இந்த வழக்கைக் கண்காணிக்கிறது. அதனால், போலீஸ்தான் குற்றவாளிகள் என்பதும், எஃப்.ஐ.ஆரில் பல தவறுகள் இருப்பதும் தெளிவாக இருக்கும் நிலையில், அவர்களைக் கைது செய்வதில் தாமதம் வேண்டாம் என நினைக்கிறேன் ‘’ எனச் சொல்லியுள்ளார் முருகன். வேறு வழியில்லாமல் அவருடைய கருத்தினை ஆமோதித்துள்ளார் முதல்வர் எடப்பாடி. 

 

இந்த நிலையில், ’’சார்ஜ் எடுப்பதற்கு முன்பே சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளிடம் பேசிய முருகன், சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார். இதனையடுத்தே, அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொண்டது சி.பி.சி.ஐ.டி.போலீஸ்!‘’ என்கிறது தமிழக உள்துறை வட்டாரம்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.