Skip to main content

அந்த எஸ்.ஐ-க்கள் தான் என்னை அடித்தது... சிறையிலிருந்து மருத்துவமனைக்கு மாறிய கைதி!

Published on 25/06/2020 | Edited on 25/06/2020

 

 

போலீசார் அடித்து துன்புறுத்தியதால், சாத்தான்குளம் பகுதியினை சேர்ந்த தந்தை மகன் இருவரும் உயிரிழந்ததாக காவல்துறைக்கு எதிராக தமிழகமெங்கும் கன்டனங்கள் பதிவாகியது. இந்த விவகாரத்தில் எஸ்.ஐ-க்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் குறிப்பிட்ட எஸ்.ஐ-களுக்கு எதிராக மேலும் பல புகார்கள் வெளிவரத்துவங்கியுள்ளது. அந்த வகையில், " என்னையும் அடித்துக் காயப்படுத்தியது அந்த எஸ்.ஐ-க்களே.! எனக்கு சிகிச்சைக் கொடுங்கள்" என சிறைச்சாலையிலிருந்து மருத்துவமனைக்கு மாறியுள்ளார் கொலை வழக்கின் விசாரணை கைதி ஒருவர்.

 

     தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலைய எல்கைக்குட்பட்டது தெற்கு பேய்க்குளம் கிராமம். இந்த ஊரில் பெட்டிக்கடை நடத்தியும், ஆட்டோ டிரைவராகவும் வசித்து வந்த ஜெயக்குமார் ஸ்ரீவெங்கடேசுவரபுரம் பஞ்சாயத்து 6-வது வார்டு கவுன்சிலர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கும் பனைகுளம் பகுதியினை சேர்ந்த ராஜ மிக்கேலுக்கும் முன்பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த மே மாதம் 18-ந்தேதி இரவில் தான் நடத்தி வந்த பெட்டிக்கடை முன்பாகவே ராஜ்மிக்கேல் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார் ஜெயக்குமார். இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டதாக ராஜமிக்கேலின் கூட்டாளிகளான அழகு ஜார்ஜ், முத்துகிருஷ்ணன், சங்கரவேல், நவீன், தசரதன், மகராஜன், கணேசன்), மத்தியாஸ், ராஜாசிங் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்டோரை சாத்தான்குளம் போலீசார் தேடி வந்தனர். இதில் சரணடைய வந்த மேல பனைகுளத்தைச் ராஜாசிங்கை எஸ்.ஐ-க்கள் பாலகிருஷ்ணன் மற்றும் ரகுகணேஷ் ஆகியோர் காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியதாக கூறப்படுகின்றது. அதன் பின்னர் ஜெயக்குமார் கொலை வழக்கில் ரிமாண்ட் செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச்சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார் ராஜாசிங். இந்நிலையில், சாத்தான்குளம் பகுதியினை சேர்ந்த தந்தை மகன் இதே எஸ்.ஐ-க்களால் தாக்கப்பட்டு  ஆசனவாயில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தந்து தெரியவர, "அந்த எஸ்.ஐ-க்கள் தான் தன்னை அடித்துக் காயப்படுத்தியது. தனக்கும் ஆசன வாயில் காயம் இருக்கின்றது. எனக்கு மருத்துவ சிகிச்சை வேண்டுமென" என கோவில்பட்டி கிளைச்சிறை சப் ஜெயிலரிடம் கோரிக்கை வைத்திருக்கின்றார்.

 

    விசாரணைக்கைதியின் கோரிக்கையை ஏற்ற சிறைத்துறை ராஜாசிங்கை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பலத்தக் காவலுடன் அனுப்பி வைத்தனர். மீடியாவிடம் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக கரோனா தொற்று வார்டுக்கு அருகிலேயே வைத்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதே வேளையில், சாத்தான்குளம் குற்ற வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக கோவில்பட்டி கிளைச் சிறையில் பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.