அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சமீப காலமாக வெளியில் காணவில்லை என்கிறார்கள் அமமுகவை சேர்ந்தவர்கள். அவர் யாருடனும் பேசுவதில்லை அவர் எங்கு இருக்கிறார் என கேள்வி எழுப்புகிறார்கள்.
அவர் பாண்டியில் உள்ள வீட்டில் யாரிடமும் தொடர்பு கொள்ளாமல் இருக்கிறார். அதற்கு காரணம் உள்ளது. யாரிடமும் பேச கூடாது என வாய் பூட்டு உத்தரவு சசிகலாவிடம் இருந்து வந்திருக்கிறது. தினகரனால் சசியின் நகர்வுகள் பாதிக்கக் கூடாது என தினகரனின் வாய்க்கு பூட்டு போட்டு விட்டார் சசி என்கிறது மன்னார்குடி வட்டாராங்கள்.