Skip to main content

ரூம் போட்டு யோசிப்பாங்களோ!!! புதிய டெக்னிக்கில் மணல் கடத்தும் கடத்தல்காரர்கள்...

Published on 13/10/2018 | Edited on 13/10/2018
sand mafia


 

ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது, மண் எப்படி அள்ளுவார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக தற்போது நடந்துள்ளது.  
 

கொள்ளிடம் ஆற்றில் படகுகள் மூலம் மணல் கடத்தி வந்தவர்களை 3 படகுகளுடன் கைது செய்துள்ளனர் காவல்துறையினர். 

நாகை மாவட்டம்  கொள்ளிடம் ஆற்றில் இரவு நேரங்களில்  மணல் கடத்தல் தொடர்ந்து நடந்துவருகிறது, இதனை தடுப்பதற்கு சிறப்பு தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் பாலசந்திரன் தலைமையிலான போலீஸார் சீர்காழி அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையோரம்  ரோந்து பணியில் இருந்தனர். அப்போது,  கொள்ளிடம் ஆற்றில் மணல் திட்டுகளிலிருந்து படகுகள் மூலம் மணலை கடத்திக் கொண்டு ஒரு கும்பல்  கரைக்கு வந்துகொண்டுவருதை கண்ட போலீஸார் அவர்களை பிடிக்க முயன்றனர், அவர்களில் ஒருவரை தவிர மற்றவர்கள் அனைவரும் படகுகளை விட்டுவிட்டு தப்பினர். 
 

பிடிபட்ட ஒருவர் கொள்ளிடக்கரையோரம் உள்ள நாதல்படுகை கிராமத்தை சேர்ந்த சரத்குமார், வயது 22 . அவரையும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 நாட்டுப் படகுகளை பறிமுதல் செய்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸாரின் தொடர் விசாரணையில், மணல் திட்டுகளிலிருந்து இரவு நேரங்களில் படகுகளில் மணலை கடத்தி வந்து கரை பகுதியில் மொத்தமாக கொட்டிவைத்துவிட்டு பின்னர் லாரிகள் மூலம் அதை வேறு பகுதிக்கு கொண்டு சென்று மணல் விற்பனை செய்வதாக கூறினர்.

 "இரவில் எஞ்சின் வைத்த ஃபைபர் படகுகளிலும் மணல் கடத்தல் நடைபெறுவதாகவும், இதை ஒன்றுமே செய்யமுடியவில்லை என்றும் புலம்புகிறார்கள் அப்பகுதி மக்கள்.

மணலை கொள்ளையடிக்க ஒவ்வொரு நாளும் ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ, சைக்கிளில் கோணிச்சாக்கு மூலம் கடத்துறானுங்க, சூப்பர் எக்சல் டூவிலரில் பத்து கோணிசாக்குளில் மணலை கடத்துறாங்க, டாட்டா ஏஸ் வண்டியில் கடத்துறாங்க, மாட்டுவண்டி, டிராக்டர், லாரியை தாண்டி இப்போ மீன்பிடிக்கும் படகுகளிலும் கடத்துறாங்க, இத தடுக்கவே முடியாது, கடந்த சில மாதங்களில்கூட ஆற்றில் சட்டிகளுடன் இறங்கி (தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்போதே) மணல் அள்ளுகிறார்கள் என்று புலம்புகின்றனர் சில காவல்துறையினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.