Skip to main content

'வேண்டாம் விட்டுடுனு சொன்னேன் கேட்கல...!' மனைவியின் ஆண் நண்பரை கொலை செய்த வாலிபர்!

Published on 24/06/2020 | Edited on 24/06/2020


 

salem district vazhappadi incident police investigation

 

வாழப்பாடி அருகே, மனைவியுடனான தவறான தொடர்பை கைவிட்டுவிடும்படி பலமுறை கூறியும் கேட்காததால், மனைவியை வைத்தே அவருடைய ஆண் நண்பரை கணவர் கொலை செய்திருப்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள கணேசபுரத்தைச் சேர்ந்தவர் சதாசிவம் (40), விவசாயி. சொந்தமாக இரண்டு டிராக்டர், ஒரு ஜேசிபி இயந்திரம் வைத்து, வாடகைக்கு விட்டு வந்தார். இவருடைய மனைவி பரிமளா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 

 

நேற்று முன்தினம் (ஜூன் 21) நள்ளிரவு, திடீரென்று வெளியே சென்றுவிட்டு வருவதாகச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவருடைய செல்போனும் அணைத்து வைக்கப்பட்டு இருந்ததால் குடும்பத்தினர் பதற்றம் அடைந்தனர். பல இடங்களில் தேடிப்பார்த்தனர்.

 

இந்த நிலையில்தான், அப்பகுதியில் உள்ள தரைப்பாலத்தின் அடியில் குப்புறபடுத்த நிலையில், சதாசிவம் சடலமாகக் கிடப்பது குறித்து தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது, அவருடைய இரு கைகளும் பின்பக்கமாக கட்டிப்போடப்பட்டு இருந்தது. கை, முகம் உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. மர்ம நபர்கள் அவரை வேறு ஓர் இடத்தில் வைத்து கொலை செய்துவிட்டு, சடலத்தை பாலத்தின் அடியில் வீசிச்சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து ஏத்தாப்பூர் காவல்துறையினர் விசாரித்து வந்தனர். விசாரணையில், பெண் விவகாரத்தில் சதாசிவம் கொல்லப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

 

வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (37). இவருடைய மனைவி பவித்ரா (24). இவருக்கும், கொலையுண்ட சதாசிவத்திற்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் தவறான தொடர்பு இருந்து வந்துள்ளது. 

 

இவர்களின் நெருக்கத்தை அரசல்புரசலாக தெரிந்து கொண்ட ரஞ்சித்குமார், இருவரும் உடனடியாக தொடர்பை விட்டுவிடும்படி எச்சரிக்கை செய்தார். ஒரு கட்டத்தில் பவித்ரா, குடும்பத்தின் நலன் மற்றும் கணவரின் மிரட்டலுக்கு அடிபணிந்து, சதாசிவத்தை சந்திப்பதை நிறுத்திக் கொண்டார். ஆனாலும் சதாசிவம், ரஞ்சித்தின் மனைவியை சந்திப்பதை தொடர்ந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ரஞ்சித்குமார், சதாசிவத்தை தீர்த்துக் கட்ட தீர்மானித்துள்ளார். இந்த திட்டத்தை செயல்படுத்த தனது உறவினரான குமார் (34) என்பவரின் உதவியை நாடியுள்ளார். 

 

கொலை திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ரஞ்சித்குமார், தனது மனைவியையே பகடைக் காயாக பயன்படுத்தினார். அதாவது, மனைவியை வைத்தே சதாசிவத்தை உடனடியாக தன் வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார் ரஞ்சித். அதை நம்பி ஆசையுடன் சதாசிவம் அர்த்த ராத்தியில் பவித்ராவின் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி வீட்டுக்குள் ஒளிந்திருந்த ரஞ்சித்குமாரும், அவருடைய நண்பர் குமாரும், அவரை மடக்கிப்பிடித்து கைகள் இரண்டையும் கயிறால் பின்பக்கமாக இறுக்கிக் கட்டிப்போட்டு, உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

 

அதன்பிறகு, அரிவாளால் அவரை வெட்டிக் கொலை செய்துள்ளனர். சடலத்தை வீட்டில் வைத்திருந்தால் மாட்டிக் கொள்வோம் என நினைத்து அவர்கள் சடலத்தை அருகில் உள்ள பாலத்தின் அடியில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

 

இக்கொலை தொடர்பாக ரஞ்சித்குமார், அவருடைய மனைவி பவித்ரா, நண்பர் குமார் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் வாழப்பாடி சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.