Skip to main content

ஓய்வு வயது அதிகரிப்பும் ஓயாத எதிர்ப்பும்! நிதி நெருக்கடியிலிருந்து தப்பித்த எடப்பாடி!

Published on 09/05/2020 | Edited on 09/05/2020

 

tamil nadu

                                                 
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 59 ஆக உயர்த்தியதற்கு அரசு ஊழியர்களிடம் எதிர்ப்புகளே அதிகமாக இருக்கிறது. தனது அரசின் நிதி நெருக்கடியைச் சமாளிக்க முதல்வர் எடப்பாடி எடுத்துள்ள நடவடிக்கை என்றாலும் கூட, பதவி உயர்வுகளுக்காகக் காத்திருக்கும் பணியாளர்களுக்கும், புதிய வேலை வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கும் இது பெரும் அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. இதுகுறித்து தங்களின் அதிருப்திகளையும் எதிர்ப்புகளையும் அரசுக்குத் தெரிவித்தபடி இருக்கிறார்கள் அரசு ஊழியர்கள். 
 

இந்த மாதம் ஓய்வு பெறுபவர்களிடமிருந்து இந்த அரசாணை அமலுக்கு வருகிறது. பொதுவாக, அரசு ஊழியர் ஒருவரின் பிறந்த தேதி மாதத்தின் முதல் நாளாக இருந்தால், அதற்கு முந்தைய மாதத்தின் கடைசி நாளில் அவர் ஓய்வு பெற அனுமதிக்கப்படுவார். அதுவே, மாதத்தின் 2–ஆம் தேதியில் ஒருவர் பிறந்திருந்தால் அந்த மாதத்தின் கடைசி நாளில் ரிட்டயர்ட்மெண்ட் கொடுக்கப்படும் என்பதுதான் விதி. 
 

அந்த வகையில், ’’ மே மாதம் 2-ஆம் தேதியைப் பிறந்த நாளாகக் கொண்டு இந்த வருடம், இந்த மாதம் ரிட்டயர்டு ஆகும் அனைத்து அரசு ஊழியர்கள் (ஓ.ஏ.க்களை தவிர) மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் இந்த 1 வருட நீட்டிப்பு பொருந்தும். தற்போது ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கணக்கிட்டால் தோராயமாக 30 ஆயிரம் பேர் இந்த மாதம் ஓய்வு பெறவிருந்தனர். இவர்கள் ஓய்வு பெற்றால் சாதாரண பணியாளர்களுக்கு ஒவ்வொருவருக்கும் குறைந்த பட்சம் 15 லட்சம் ரூபாயும், உயர் பொறுப்பிலுள்ள அதிகாரிகளுக்கு அதிகபட்சம் 40 லட்சம் ரூபாயும் அவர்களுக்கு அரசு செட்டில்மெண்ட் செய்ய வேண்டியதிருக்கும். அந்த வகையில், சுமார் 5,000 கோடி ரூபாய் அரசுக்குத் தேவை. இதுவே ஒரு வருடத்துக்கு கணக்கிட்டால் 12 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதி தேவைப்படும். தற்போது ஓய்வு பெறும் வயதை நீட்டித்திருப்பதால் இன்னும் 1 வருடத்திற்கு செட்டில்மெண்ட் சிக்கல் எடப்பாடி அரசுக்கு இல்லை. ஆக, அவசர நெருக்கடியிலிருந்து தப்பித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி’’ என்கின்றன அரசு ஊழியர் சங்கங்கள். 
 

இதற்கிடையே, அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்திய அரசின் கொள்கை முடிவை எதிர்த்து பொது நல வழக்குப் போட தமிழக அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருக்கும் வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் ஆலோசிக்கிறார்கள். கரோனா விவகாரத்தால் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் மீறி பொது நல வழக்கு குறித்தும் ஆலோசிக்கிறார்கள் தமிழக இளைஞர்கள் !  


 

சார்ந்த செய்திகள்

Next Story

திரவ நைட்ரஜன் உணவுப் பொருள்; உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
liquid nitrogen foodstuff; Food Safety Department action order

திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்தவொரு உணவு பொருள்களையும் கொடுக்கக் கூடாது எனவும், உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.