Skip to main content

'பின்லாந்துக்கான இந்தியத் தூதராக ரவீஷ் குமார் நியமனம்'- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

raveesh kumar appointed next Ambassador of India to Finland ministry of external affairs


பின்லாந்து நாட்டிற்கான இந்தியத் தூதரக ரவீஷ்குமாரை நியமித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
 


ரவீஷ்குமார் தற்போது இந்திய வெளியுறவுத்துறை இணைச்செயலாளராகப் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளராக ரவீஷ் குமார் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எட்டு இந்தியர்களுக்கு மரண தண்டனை விவகாரம்; கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

eight Indian officer sentenced in qatar and appeal at court

 

கடந்த வருடம் புதிய நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்கும் திட்டத்தை கத்தார் நாடு செயல்படுத்தி இருந்தது. அங்கு தயாரிக்கப்பட இருக்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஜெர்மன் நாட்டின் தொழில்நுட்பத்துடன் சேர்த்து வடிவமைக்கப்பட்டு கத்தார் நாட்டின் கப்பல் படைக்காக உருவாக்கப்பட இருந்தது. இந்த வடிவமைப்புப் பணிகளில் ஈடுபட்ட நிறுவனங்களில் ஒன்று 'அல்தாரா'.  இந்த நிறுவனம் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் 75 பேரை பணியில் அமர்த்தியிருந்தது. 

 

இந்த 75 பேரில் முன்னாள் இந்திய வீரர்கள் 8 பேர் இஸ்ரேல் நாட்டுக்காக உளவு பார்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் அந்த 8 பேரையும் கடந்த ஆண்டு கத்தார் உளவுத்துறை கைது செய்தது. அவர்கள் மீதான வழக்கு விசாரணை கத்தார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி வெளியானது. அதில் அந்த முன்னாள் இந்திய வீரர்கள் 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது கத்தார் நீதிமன்றம். 

 

இந்த தீர்ப்பிற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "கத்தாரில் எட்டு கடற்படை முன்னாள் அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தீர்ப்பின் முழு விவரங்கள் வெளி வருவதற்காக காத்திருக்கிறோம். எட்டு பேரின் குடும்பத்தினரோடும், சட்ட வல்லுநர்களுடனும் தொடர்பில் உள்ளோம். குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்றுள்ள இந்தியர்கள் 8 பேரைக் காக்கத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் ஆய்வு செய்து வருகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

 

இந்த நிலையில், முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை வழங்கியதை எதிர்த்து கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது, “தோகாவில் உள்ள இந்தியத் தூதரகம், கடற்படை வீரர்களுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மேலும், அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது” என்று கூறினார். 

 

 

Next Story

“அரசியல் லாபத்திற்காக பயங்கரவாதத்தை ஆதரிக்கக் கூடாது” - கனடா மீது வெளியுறவுத்துறை அமைச்சர் மறைமுக தாக்கு

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

Foreign Minister's Indirect speech about Canada

 

கனடாவில் உள்ள பயங்கரவாத புலிப் படைப் பிரிவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார் மற்றும் ஆதரவு குழுக்களின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கனடா அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், பயங்கரவாத புலிப் படைப் பிரிவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார், கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட இவர், கடந்த 1997 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து கனடா சென்று அந்நாட்டு குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார். இவருடைய படுகொலையில் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கு தொடர்பு உள்ளதாகப் பயங்கரவாத தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்தது.

 

அதனைத் தொடர்ந்து, பயங்கரவாதி நிஜார் கொலைக்கு இந்திய உளவு அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகக் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டினார். இதனையடுத்து, ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டிற்கு இந்தியா மறுப்பு தெரிவித்து கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், கனடா தூதரக அதிகாரியிடம் இந்தியாவை வெளியேற வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், கனடாவில் வாழும் இந்தியர்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. .

 

இந்த நிலையில், நியூயார்க்கில் நடைபெற்ற 78வது ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று (26-09-23) உரையாற்றினார். அதில் அவர், “அரசியல் லாபத்திற்காக ஒரு நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் உள்நாட்டு விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிடக் கூடாது. சில நாடுகள் தாங்கள் காட்டும் வழிகளில் மற்ற நாடுகள் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தக் கூடாது. வணிகத்துக்காக உணவு மற்றும் எரிபொருள்களை ஏழைகளிடம் இருந்து செல்வந்தர்களுக்கு வழங்கக் கூடாது. கொரோனா பெருந்தொற்றின் காலத்தில் தடுப்பூசிகள் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டதை போன்ற அநீதிகள் இனிமேல் நடக்கக் கூடாது. அதே போன்று, அரசியல் நோக்கத்துக்காக பயங்கரவாதம், வன்முறை போன்ற செயல்களை ஐ.நா உறுப்பு நாடுகள் ஆதரிக்கக் கூடாது” என்று பேசினார்.