பிரதமர் மோடி வருகை; சூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் கைது

Prime Minister Modi's visit; Environment activist Mugilan arrested

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார், இதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி பிற்பகல் 2.06 மணிக்கு சூலூருக்கு வர இருக்கிறார். அங்கிருந்து பிற்பகல் 2.10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்கிறார். அதனைத் தொடர்ந்து பல்லடத்தில் 2.45 மணிக்கு மாதப்பூரில் நடைபெறும் பாஜக யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார்.

இந்த விழாவிற்காக தாமரை வடிவில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் 5 லட்சம் பேர் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிற்பகல் 3.50 மணிக்கு பல்லடத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை செல்கிறார். மாலை 5.15 மணிக்கு சிறு குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்கதிட்ட கருத்தரங்கில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு மாலை 6:45 மணிக்கு மதுரை பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை காலை 8.40க்கு மதுரையிலிருந்து தூத்துக்குடி புறப்படுகிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Prime Minister Modi's visit; Environment activist Mugilan arrested

கோவை மதுரை ஆகிய இடங்களில் பிரதமர் வருகையைமுன்னிட்டு போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி திருப்பூர் வருகையில் அவருடைய வருகையை எதிர்த்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்த இருப்பதாக சமூக செயற்பாட்டாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான முகிலன் அறிவித்திருந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

modi mugilan police
இதையும் படியுங்கள்
Subscribe