Skip to main content

பிக்பாஸ்-2 ல் இருந்து பொன்னம்பலம் வெளியேற்றப்பட்டார்!

Published on 12/08/2018 | Edited on 12/08/2018
ponnambalam


விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ்-2ல் இருந்து பொன்னம்பலம் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் வெளியேறுவார்கள். அந்தவகையில் ஏற்கனவே மஹதி, ஆனந்த் வைத்தியநாதன், நித்யா, ஷாரிக் உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொன்னம்பலம் வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வாரம் வெளியேறுவோரின் பட்டியலில் சென்ராயன், ஜனனி ஐயர், மற்றும் பொன்னம்பலம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதனால் யார் வெளியேற்றப்படுவார் என்பது அனைவருக்கும் மிகவும் குழப்பத்தை ஏற்ப்படுத்தியது. காரணம், சென்ராயன் மற்றும் ஜனனி ஐயருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் உண்டு.
 

ponnambalam


அதே போல் ஆரம்பத்தில் இருந்து பொன்னம்பலம் வெளியேற்றப்படுவோர் பட்டியலில் இடம்பெற்று வந்தாலும் மக்கள் அவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தனர். கடந்த வாரம் வெளியேற்றபடுவோர்கள் பட்டியிலிலும் பொன்னம்பலம் பெயர் இடம்பெற்றது. அதில் ஷாரிக் அல்லது பொன்னம்பலம் வெளியேறுவார் என்று பார்வையாளர்கள் கருதினர். ஆனால், பொன்னம்பலம் தப்பினார். ஷாரிக் வெளியேறினார்.

கெட்ட வார்த்தை பேசுவது, சர்வாதிகாரி ஐஸ்வர்யாவை கழுத்தை பிடித்து குண்டுகட்டாகத் தூக்கி, நீச்சல்குளத்தில் போட்டது, ஒவ்வொருவருக்கும் அறிவுரைகளை வழங்கியது, டாஸ்க்கில் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொள்ளாமல் இருப்பது என ஒவ்வொரு வாரமும் பல குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்பட்டாலும் அவற்றையெல்லாம் கடந்து, வெளியேறாமல் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறார்.

இப்படி ஆரம்பத்தில் இருந்து மக்காளால் காப்பாற்றப்பட்டு வந்த பொன்னம்பலம் இந்த வாரம் கடும் போட்டி நிலவியதால், குறைவான வாக்குகள் பெற்று வெளியேறுகிறார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் கடந்த பாகம் போன்றே இந்த பாகத்திலும் புதிய போட்டியாளர்கள் வைல்ட்கார்ட் என்ற முறையில் இணைந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது டிரெண்டில் இருக்கும் நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டின் புதிய போட்டியாளராக உள்ளே நுழைய போவதாக கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

மநீம நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Manima Executive Committee, Date Notification for Executive Committee Meeting

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் வரும் 23.01.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 11:30 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. எனவே அனைத்து நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உலகின் மிக உயர்ந்த கட்டடத்தில் திரையிடப்பட்ட விக்ரம் ட்ரைலர்!

Published on 01/06/2022 | Edited on 01/06/2022

 

k

 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி  ஃபகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் பிரம்மாண்டமாக இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகின. பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படம் வருகிற ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

 

இதற்கிடையே, 'விக்ரம்' படத்தின் ட்ரைலர் உலகின் உயரமான கட்டடத்தில் திரையிடப் படக்குழு முடிவு செய்திருந்தது. அதன்படி துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் உள்ள மிகப்பெரிய திரையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது திரையிடப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் ப்ரோமோவை ஒரு பிரம்மாண்ட மேடையில் வெளியிடப்போவதாகப் படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. படம் வெளியாவதற்கு முன்பு விக்ரம் பட புரோமோஷன் வேலைகள் வேறு எந்த படத்திற்கும் இல்லாத வகையில் விறுவிறுப்பான நடைபெற்று வருகிறது.