பொன்னமராவதியில் நடந்த மக்கள் போராட்டம் கலவரமாக மாறி தடியடி, கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் ஐ.ஜி., ஆட்சியர் முன்னிலையில் கலவரத்தை பரவவிடாமல் தடுக்க 49 வருவாய் கிராமங்களுக்கு 144 உத்தரவு பிறப்பித்த இலுப்பூர் கோட்டாட்சியர் சிவதாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Advertisment

ponnamaravathi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="1282094959"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

18 ந் தேதி இரவு பொன்னமராவதி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஒரு சமூக மக்கள், மதியம் நாங்கள் கொடுத்த புகாருக்கு எடுத்த நடவடிக்கை என்று என்று ஆடியோ விவகாரம் குறித்து கேட்ட நிலையில் போலிசாரின் பதில் திருப்தி இல்லை என்று நள்ளிரவு வரை காவல் நிலையம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

மறுநாள் 19 ந் தேதி காலை முதல் பொன்னமராவதி செல்லும் அனைத்து வழித்தடங்களும் மக்கள் போராட்டங்களால் முடக்கப்பட்டது. பொன்னமராவதி பேருந்து நிலையம் முற்றுகையிடப்பட்டதால் 800 போலிசார் குவிக்கப்பட்டனர், கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தப்பட்ட நிலையில் கல்வீச்சு சம்பவம் நடந்தது. இதனால் வாகனங்கள் சேதமடைந்தது, மேலும் போலிசார், பொதுமக்கள் உள்பட பலர் காயமடைந்தனர், இதனால் பதற்றம் அதிகரித்தது. இந்த சம்பவம் ஊருக்குள் பரவியதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டது.

பொன்னமராவதியில் மேலும் கலவரம் ஏற்பட்டுவிடாமல் தடுக்க திருச்சி சரக ஐ.ஜி, டி.ஐ.ஜி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, எஸ்.பி. செல்வராஜ், இலுப்பூர் கோட்டாட்சியர் சிவதாஸ் மற்றும் அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்திய பிறகு கோட்டாட்சியர் சிவதாஸ் பொன்னமராவதி தாலுகாவில் உள்ள 49 வருவாய் கிராமங்களுக்கு 19 ந் தேதி மாலை முதல் 21 ந் தேதி மதியம் வரை 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.

ponnamaravathi

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6677891863"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அதனால் அந்த பகுதியில் பதற்றம் குறைந்து அடுத்த நாட்களில் இயல்பு நிலை திரும்ப தொடங்கியது. 22 ந் தேதி முதல் முழுமையாக கடைகள் திறக்கப்பட்டதுடன் போக்குவரத்தும் இயங்கியது. பாதுகாப்புக்காக போலிசார் ஆங்காங்கே தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் மக்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர 144 உத்தரவிட்ட இலுப்பூர் கோட்டாட்சியர் சிவதாசை தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றிவிட்டு, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் இருந்து கீதா என்பவரை இலுப்பூர் கோட்டாட்சியராக நியமித்துள்ளனர்.

இந்த உத்தரவை பார்த்து வருவாய் துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அவர்கள் கூறும்போது... பொன்னமராவதியில் பிரச்சனை அதிகமான நிலையில் கலவரம் வெடித்துவிடக் கூடாது என்பதற்காக மேல் அதிகாரிகளின் ஆலோசனைப்படியும் வாய்மொழி உத்தரவுப்படியும் தாசில்தார் அறிக்கைப்படியும் 144 உத்தரவை ஆர்.டி.ஓ போட்டார். அந்த உத்தரவால் பெரும் கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கலவரத்தை தடுத்து நிறுத்த காரணமாக இருந்த கோட்டாட்சியரை தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பி இருப்பது வேதனை அளிக்கிறது என்றனர்.