Skip to main content

ஒரு வருடத்திற்குள் வழக்குகளை முடிப்பேன்... எங்களை சாதாரணமாக நினைக்காதீர்கள்... -பொன்.மாணிக்கவேல்

Published on 30/11/2018 | Edited on 30/11/2018

 

உயர்நீதிமன்றம் இல்லையென்றால் நானும் இல்லை, இந்த குழுவும் இல்லை, இந்த ஆப்பரேஷனும் இல்லை. உயர்நீதிமன்றம்தான் பழமையான பொருட்களெல்லாம் வெளிநாடுகளிலிருந்து மீட்டெடுக்கவேண்டும், திருட்டை குறைக்க வேண்டுமென கடுமையான முயற்சி செய்தது உயர்நீதிமன்றம். உயர்நீதிமன்றம் இல்லையென்றால் நாங்களெல்லாம் இல்லை. இந்த வழக்குகளை உறுதியாக ஒரு வருடத்திற்குள் முடிப்பேன், ரொம்பநாள் நான் இழுக்கமாட்டேன். ஆஸ்திரேலியாவிலிருந்து 7 சிலைகள் வரவேண்டியிருக்கிறது. கூடுதலாக ஒரு சிலையையும் கண்டுபிடித்துள்ளோம், இந்த சிலையை 30 கோடிக்கு 2000 ஆண்டில் வாங்கியிருக்கிறார்கள். அவர்கள் அதை கொடுக்க சம்மதித்துள்ளனர். நிறையவை 36 வருடங்களுக்கு முன்னால் நடந்தவை. அவற்றிற்கான எஃப்.ஐ.ஆர். கூட இல்லை நான் எஃப்.ஐ.ஆர். போட்டிருக்கிறேன். இந்த குழு விசாரிக்கும் குற்றங்களெல்லாம் நேற்றோ அல்லது அதற்கு முன்தினமோ அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்பாகவோ நடந்ததில்லை. எல்லாம் 30, 35 வருடங்களுக்கு முன்பு நடந்தவை அவற்றிற்கான எஃப்.ஐ.ஆர். கூட இல்லை. அப்போது நாங்கள் பணியில்கூட இல்லை இவ்வளவு உங்களில் சிலர் அப்போது பிறந்திருக்கக்கூட மாட்டார்கள். அதனால் எங்களை சாதாரணமாக நினைக்காதீர்கள், நாங்கள் மிகவும் இக்கட்டான, கடுமையான சூழ்நிலையிலேயே வேலை செய்கிறோம். ராஜராஜசோழன் வழக்கெல்லாம், வழக்கே கிடையாது, எஃப்.ஐ.ஆர்.-ஏ கிடையாது. 



என்னுடன் பணியாற்றிய நிறையபேர் வந்திருந்தாங்க. நானே எதிர்பாக்கல நிறைய கான்ஸ்டபிள்ஸ் வந்திருந்தாங்க. கான்ஸ்டபிள் சொன்னாங்க ஐயாவ புடிக்கும் அப்படினு, பாராட்டுவது அப்படிங்குறது வேற, புடிக்கும்னு சொல்றது வேற. அதைவத்து, சரி நாம ஓரளவுக்கு சரியாக வேலை பார்த்திருக்கோம், வாழ்ந்திருக்கோம் அப்படிங்குற திருப்திகிடைத்துவிட்டது. நான் சில கடுமையான வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்துவேன், நெருக்கடி கொடுப்பேன், அதிக நேரம் வேலை பார்ப்பேன். அப்படியே எல்லாரும் இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பேன். அதனால என்மேல அவங்களுக்கெல்லாம் கொஞ்சம் வருத்தமெல்லாம் இருந்திருந்தாலும் கூட என்னை விட்டுக்கொடுக்கமா இருந்தாங்க. அவங்களுக்கெல்லாம் நன்றி. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சிலை கடத்தலில் பழனிசாமி? அந்த இரு அமைச்சர்கள் யார்? - புகழேந்தி

Published on 13/11/2022 | Edited on 13/11/2022

 

"Palaniswami in idol smuggling? Who are those two ministers?” - Praise

 

திருவள்ளூர் துணை கண்காணிப்பாளராக இருந்த காதர் பாஷா, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜியாக செயல்பட்ட பொன் மாணிக்கவேல் மீது குற்றவாளியைத் தப்பிக்கவிட்டார் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இவ்வழக்கு விசாரணையை சிபிசிஐடி மேற்கொள்ள உத்தரவிட்டது.

 

கடந்த 6 ம் தேதி பொன் மாணிக்கவேல் மீது சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்தது பெரிதாகப் பேசப்பட்டது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த பொன்.மாணிக்கவேல் இக்குற்றச்சாட்டினை முற்றிலுமாக மறுத்தார். 

 

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”பொன் மாணிக்கவேல் மிகச்சிறந்த அதிகாரி. நான் அவருடன் பழகியவன். காவல்துறையில் உண்மையான அதிகாரியாக விளங்கியவர் அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. இவர் சிலை கடத்தல் பிரிவிற்குள் போன பின்புதான் பல உண்மைகளைச் சொன்னார். 2019 ஜூலை 24ம் தேதி உயர்நீதிமன்றம் பொன் மாணிக்கவேலை மாற்ற வேண்டும் எனச் சொன்னவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் பொன் மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தையும் உச்சநீதிமன்றத்தையும் நாடினார்.

 

அதே நாள் பொன் மாணிக்கவேலின் வழக்கறிஞர், தமிழகத்தில் இரண்டு அமைச்சர்களுக்கு இதில் தொடர்பு இருக்கிறது எனக் கூறினார். ஆகவே எடப்பாடி பழனிசாமி பொன் மாணிக்கவேலின் விசாரணையைத் தடுத்து சிபிசிஐடிக்கு மாற்றி அந்த இரு அமைச்சர்களைக் காப்பாற்ற இவ்வாறு செய்கிறார். 

 

தமிழக மக்கள் வணங்கும் கடவுள் சிலைகளைக் கடத்துவதற்கு யார் யார் முற்பட்டார்களோ அவர்களுக்குத் தண்டனையைப் பெற்றுக் கொடுத்ததாகப் பொன் மாணிக்கவேல் சொல்கிறார். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவரை மாற்ற முயன்றது, சட்டமன்றத்தில் அதைப் பற்றிப் பேசியது பழனிசாமி தான். 

 

இப்பொழுது எனது கேள்வி எல்லாம் அந்த இரண்டு அமைச்சர்கள் யார்? அதில் பழனிசாமியும் இருக்கிறாரா? என நான் சந்தேகப்படுகிறேன். பொன் மாணிக்கவேல் அதைத் தெளிவுபடுத்த வேண்டும். மக்கள் அதைத் தெரிந்துகொள்ள வேண்டும்” எனக் கூறினார்.

 

 

Next Story

37 ஆண்டுகளுக்குபின் அர்ச்சனை..! ஆஸ்திரேலியா சென்று திரும்பிய நடராஜர்..! (படங்கள்)

Published on 13/09/2019 | Edited on 13/09/2019

 

கடந்த 1982ம் ஆண்டு தமிழக கோவிலில் இருந்து ஐம்பொன் நடராஜர் சிலை திருடப்பட்டது. இந்த சிலையை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில், பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இதன்பின் பொன் மானிக்கவேல் தலைமையிலான குழு அந்த சிலை ஆஸ்திரேலியாவில் இருப்பதை கண்டுபிடித்து, அதை மீட்டு இந்தியா கொண்டுவந்துள்ளது. இந்நிலையில் டெல்லியிலிருந்து இன்று காலை சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த நடராஜர் சிலைக்கு 37 ஆண்டுகளுக்கு பின் முதன்முதலாக மாலை அணிவித்து அர்ச்சனை செய்யப்பட்டது.