பொள்ளாச்சி கொடூர பாலியல் வன்முறை குறித்து செய்தி வெளியிட்டது தொடர்பாக ஏற்கனவே நக்கீரன் ஆசிரியரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நான்கு மணிநேரம் விசாரணை செய்தது. இந்த வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்ட நிலையில் மீண்டும் சி.பி.ஐ. நக்கீரன் ஆசிரியரிடம் உள்ள சாட்சி மற்றும் ஆதாரங்களைக் கேட்டு சம்மன் அனுப்பியுள்ளதால் இன்று ( 2019 மே-21) காலை 11 மணிக்கு சென்னை பெசண்ட்நகர் ராஜாஜிபவன் வளாகத்திலுள்ள சி.பி.ஐ. அலுவலத்தில் ஆஜரானார்.