Advertisment

ட்ரோன்களை பறக்கவிட்ட காவல்துறை; பட்டங்கள் மூலம் பதிலடி கொடுத்த விவசாயிகள்

Police Flying Drones Farmers reaction with kite

மத்திய அரசு சார்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியான விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த சூழலில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி கடந்த 12 ஆம் தேதி (12.02.2024) மாலை சண்டிகரில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இதனால் விவசாயிகள் திட்டமிட்டபடி, பஞ்சாப்பில் இருந்து தங்கள் டிராக்டர்கள் மூலம் ‘டெல்லி சலோ’ என்ற பேரணியை நேற்று முன்தினம் (13.02.2024) பதேகர் சாஹிப் பகுதியில் இருந்து தொடங்கி, சம்பு எல்லை வழியாக டெல்லியை நோக்கி பேரணியைத்தொடங்கினர்.

Advertisment

அதே சமயம் டெல்லி எல்லைகளில் விவசாயிகளைத் தடுப்பதற்காகத் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். விவசாயிகளின் போராட்டத்தை தடுக்கும் வகையில் மார்ச் 12 ஆம் தேதி வரை டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் டெல்லி - பஞ்சாப் எல்லையில் பேரணி சென்ற விவசாயிகள் மீது ட்ரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் டெல்லி எல்லையே புகை மண்டலமாக மாறியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விவசாயிகள் பட்டங்களை பறக்கவிட்டு டிரோன்களை தடுத்து நிறுத்தினர். ஹரியானா காவல்துறையினர் டிரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதற்கு பஞ்சாப் மாநில அதிகாரிகள் கண்டனம் தெரிவித்தனர். பஞ்சாப் பகுதிக்குள் டிரோன்களை அனுப்ப வேண்டாம் என பாட்டியாலா காவல் துறை ஆணையர் சவுகத் அகமது அம்பாலா காவல்துறை துணை ஆணையருக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

Advertisment

இந்நிலையில் மத்திய அரசைக் கண்டித்து பஞ்சாப்பில் விவசாயிகள் இன்று (15.02.2024) ரயில் மறியல் போராட்டத்தை நடத்த உள்ளனர். இந்த ரயில் மறியல் போராட்டம் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளதா விவசாயிகள் தெரிவித்துள்ளனர். போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் நேற்று (14.02.2024) இரவு 7 மணிக்கு மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவிருந்தது. இருப்பினும் நேற்றிரவு நடைபெற இருந்த பேச்சுவார்த்தை இன்றுமாலை 5 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Drone Farmers kite Punjab
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe