Skip to main content

’’பாமகவின் அறிக்கை, மறியல், போராட்டம் எல்லாவற்றிற்கும் பின்னால் ஒரு பேரம் இருக்கும்’’-பொங்கலூர் மணிகண்டன் பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 10/04/2019 | Edited on 10/04/2019

 

பாமகவில் இருந்து  விலகுவதாக அக்கட்சி்யின் மாநில துணைத்தலைவர் பொங்கலூர் மணிகண்டன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த விளக்கம்:

’’இவ்வளவு நாள் தாமதமாக நான் ஏன் விலகுகிறேன் என்றால்,   மக்களவை தேர்தலில் 7 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது. திண்டுக்கல் தொகுதிக்கு பொறுப்பாளராக என்னை நியமித்தார்கள்.   அந்த தொகுதி மட்டுமல்லாது எல்லா தொகுதிக்கும் நான் களப்பணிக்கு சென்றபோது, மக்கள் இந்த கூட்டணியை காரி காரி துப்புகிறார்கள்.  கேவலமாக பேசுகிறார்கள். 

 

p

 

  வருசக்கணக்கில் ஆகியிருந்தால்  கூட பரவாயில்லை.  போன மாசம் வரைக்கும் எவ்வளவு மோசமாக பேசமுடியுமோ அவ்வளவு மோசமாக பேசிவிட்டு  ஒரே மாதத்தில் மாறி கூட்டணி அமைத்தால் இவர்கள் சொன்னதை எப்படி நம்ப முடியும்? 


வன்னியர் சமுதாயத்தையும்,  எங்களைப்போன்ற வேறு சமுதாயத்தையும்  அடகு வைத்துவிட்டார்கள்.  பாமகவை பொறுத்தவரைக்கும் வெளியிலிருந்து பார்த்தால் பிரமிப்பாக இருக்கும்.  உள்ளே ஒன்றும் இல்லை.  

 

  ஒவ்வொரு ஆண்டும் நிதி நிலை அறிக்கை வெளியிடுவார்கள்.    மாதிரி வேளாண் அறிக்கை வெளியிடுவார்கள்.  பொதுவாக பாமகவின் அறிக்கை, மறியல், போராட்டம் எல்லாவற்றிற்கும் பின்னால் ஒரு பேரம் இருக்கும்.   உதாரணமாக டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்திக்கொண்டே பின்னால் பேரம் பேசி பணம் வாங்கிக்கொள்வார்கள்.  

 

p


ராமதாஸ் வெளியிட்ட கழகத்தின் கதை புத்தகத்தை படித்தால் அதிமுகவினர் தற்கொலை செய்துகொள்வார்கள்.  ஜெயலலிதா உள்பட அனைவரையும் அவ்வளவு கேவலமாக, அசிங்கமாக, கொடூரமாக பேசியுள்ளார் ராமதாஸ்.     100 வினாக்கள்  என்ற புத்தகத்தையும் வெளி்யிட்டுள்ளார் ராமதாஸ்.  ’’எழுக தமிழ்நாடு’’ என்று ஒரு புத்தகம், ’’மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’’ என்று ஒரு புத்தகம், ’’புதிய அரசியல் புதிய நம்பிக்கை ’’என்று ஒரு புத்தகம்,  ’’கேட்டது நீதி கிடைத்தது சிறை’’ என்று ஒரு புத்தகம்.  நான் கட்சியில் சேரும்போது இந்த புத்தகங்களை எல்லாம் கொடுத்தார் ராமதாஸ்.   இந்த புத்தகங்களில் உள்ள வார்த்தைகளுக்கும் இப்போது அவர் பேசுவதற்கும் சம்பந்தமே இல்லை.   

 

p

 

டயர் நக்கிகள் என்று சேலத்தில் அன்புமணி ராமதாஸ் பேசும்போது நானும் அருகில் இருந்தேன்.   ஆண்மை இல்லாதவன் என்று ஒரு அமைச்சரை விமர்சித்தார் அன்புமணி.   இன்று அவர்களோடு கைகோர்த்துக்கொண்டுள்ளார்.


ஏற்கனவே திராவிட கட்சிகளோடு கூட்டணி அமைத்ததற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.  மீண்டும் அக்கட்சியினரோடு   கூட்டணி அமைக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு அதிமுகவுடன் திடீரென கூட்டணி அமைத்தது அதிர்ச்சியை அளிக்கிறது’’என்று   ராமதாஸ் மீதும், அன்புமணி ராமதாஸ் மீதும் சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறி, தனது விலகலுக்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.